கத்துக்குட்டிகளின் அட்டகாசம்-2 ரம்லா பானு,புவனேஸ்வரி.

சுமையா? சுவையா? -ஏ.ரம்லா பானு

அம்மா என்பது
எலும்பும், சதையும் கொண்ட
ஓர் உடல் அல்ல…

உலகையே ரட்சிக்கும்
உன்னத உணர்ச்சி.
சகல பெண்களிடமிருந்தும்
ஜனிக்கிற மகா சக்தி.
கருணை மழை கொட்ட காத்திருக்கும் கார்மேகம்.,

பூ மண்டலத்தையே
குளிர்விக்கும் தாவர மணம்.
சகல உயிர்களையும்
தாங்கும் பூமியின் பலம்.
 - ஏ.ரம்லா பானு. 
   பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி.

ஆயிரமாயிரம் ஆசைகள் - -எம்.புவனேஸ்வரி.
அன்னையின் மடியில் உறங்க ஆசை
வாயில்லா உயிர்களுடன் பேச ஆசை
யாருமில்லா உலகில் வாழ்ந்திட ஆசை
பூக்களுடன் பூக்களாக சிரிக்க ஆசை
பறவை போல் வானில் பறக்க ஆசை
பனித்துளியில் நனைந்திட ஆசை
வானத்தை பூமிக்குக் கொண்டு வர ஆசை
உலகம் முழுவதும் பச்சையாக ஆசை
பச்சை புல்வெளியில் படுக்க ஆசை
தென்றலுடன் இயற்கையை ரசிக்க ஆசை
இதுபோல ஆயிரமாயிரம் ஆசைகள்!
இவை எல்லாம் நடந்து விட
அன்றே நான் இறந்துவிட ஆசை.

-எம்.புவனேஸ்வரி.
பதினொன்றாம் வகுப்பு மாணவி.
                                         
                                          உங்கள் கருத்துக்கு..


ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்