தேடல்- ஆக்கம் -சி.ஆர்.

இந்த மாதம் சம்பளம் வாங்க ஆதார் எண் அவசியம் வேண்டும் என்ற செய்தி எனக்கு இடியோசை போல வந்திறங்கியது!ஆதார் அட்டையை என்றோ ஒரு நாள் எடுத்துப்பார்த்து விட்டு எதோ ஒரு புத்தகத்தில் சொருகி வைத்த ஞாபகம்! அதை இரண்டு நாட்களாக தேடிவருகிறேன்! கிடைக்கவில்லை! வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் "என்ன தேடுறீங்க?"ன்னு கேட்டாலும் கண்டுப்பிடிச்சுட்டு சொல்றேன் என சுருக்கமாக சொல்லிவிட்டு விரிவாக தேட ஆரம்பித்துவிடுவேன்! இன்று அந்த தேடலுக்கு
ஒரு முடிவு கட்டவேண்டும்.இந்த தேடுதல் வேட்டையில் எப்போதோ பையன் புத்தகத்தில் ஒளித்து வைத்த மயிலிறகு கிடைத்தது! தேடியது கிடைக்காவிட்டால் என்ன? மயிலிறகு கிடைத்ததே!இப்படி தான் சில வேளைகளில் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கிறது! மயிலிறகில் வருடுதல் சுகமானதே!!
-சி.ராஜேந்திரன்.

1 கருத்துரைகள்:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தேடலிலும் ஒரு சுகம் இருக்கு....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்