அப்பா- எஸ்.ராமகிருஷ்ணன் #ப.பி.

அப்பாவிற்கு எங்கள் யாரோடும் சேர்ந்து இருப்பதற்குப் பிடிக்கவேயில்லை. அதை என் பெரிய அக்கா ஒரு முறை அவரிடமே சொல்லியும் விட்டாள்.

அதற்கு அப்பா ‘தூரத்தில் வசிக்கும்போது மட்டும் தான் நீங்கள் என் பிள்ளைகள் என்ற நினைப்பு வருகிறது. அருகில் இருந்தால் வேறு யாரையோ போலிருக்கிறீர்கள்’ என்றிருக்கிறார்.

அப்படித்தான் அப்பாவின் பேச்சு எப்போதுமிருக்கும். அது இயல்பானதா அல்லது தன்னை மறைத்துக் கொள்ள அப்படி பேசுகிறாரா என்ற சந்தேகம் எனக்குண்டு. நானே சில வேளை அப்படி பேசுகிறேன் என்று என் மனைவி சொல்கிறாள். எதற்காக இந்தப் பழக்கம்.

அப்பாவிடம் பகிர்ந்துகொள்ளப்படாத ரகசியங்களும் அவமானங்களும் வலிகளும் நிறைய இருக்கின்றன என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.

சொற்ப வருமானத்தில் பெரிய குடும்பம் ஒன்றை வளர்த்து காப்பாற்றி வருவது எளிதானதில்லை.யாரையும் திருப்தி செய்ய முடிந்திருக்காது.

சில வேளைகளில் அப்பாவை என் கூடவே வைத்து ஏசி செய்யப்பட்ட அறையைத் தந்து அவரை காரில் அழைத்துக் கொண்டு போய் தேவைப்படும் உடைகள் உணவுகள்’ வாங்கித் தந்து அன்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றும்.

ஆனால் அவரை நேரில் பார்த்தவுடன் அந்த கனவுக்குமிழ் தானே உடைந்து போய்விடும். அல்லது அவரே உடைத்துவிடுகிறார்.

குதிரைகள் பேச மறுக்கின்றன –
எஸ்.ராமகிருஷ்ணன்

1 கருத்துரைகள்:

தனிமரம் said...

அப்பாவின் மனநிலை அப்படி! சார் மீண்டும் வலையில் வருவது கண்டு மகிழ்ச்சி.

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்