திமுக இந்து எதிர்ப்பு கட்சியா? - ஒரு இரு தரப்பு வாத தொகுப்பு

💥"திமுக இந்து எதிர்ப்புக் கட்சி என்ற தொணியில் திட்டமிட்ட பிரச்சாரம் சமீப காலமாக பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், எனது குடும்பத்தினரும் சரி கட்சித் தொண்டர்களின் குடும்பத்தினரும் சரி இறை நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

என் மனைவி தமிழகம் முழுவதும் இருக்கும் பல்வேறு கோயில்களுக்கும் சென்று வருகிறார். அவரிடம் ஒருமுறைகூட இதுதொடர்பாக நான் கேள்வி எழுப்பியதில்லை. ஏனெனில் மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் யாருடைய பாதையிலும் நாங்கள் குறுக்கிடுவதில்லை" எனக் கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து, ஒட்டியும், வெட்டியும் இருவகையில் அலசி ஆராயும் ஒரு மினி விவாத மேடை:

💥சரி என்ற பார்வையில்:

இதை  சாமி கும்பிடுபவர்கள் வரவேற்கவேண்டும்.
கவிஞர் கண்ணதாசன் கூட வெறி பிடித்த நாத்திகவாதியாக இருந்து அதே வெறி பிடித்த ஆதிக்கவாதியாக மாறினார். எனவே இதில் உள் நோக்கம் கற்பிக்காதீர்கள்.

பல்வேறு மதங்களும் பாகுபாடுகளும் நிறைந்த இந்தியா போன்ற பன்முகத்தண்மை கொண்ட சமூகத்தில் அரசியல் தலைமை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காட்டியிருக்கும் திரு ஸ்டாலினின் முதிர்ச்சி பாராட்டத்தக்கது.

காலம் மாறும்போது கருத்துகளும் மாறலாம் ,,எல்லோரும் மனிதர்கள்தானே நம்பிக்கைகள்' வரலாம் ,மூட நம்பிக்கைகள் வரகூடாது .

நடுநிலையில் உள்ள ஓட்டுக்களைக் கவர, அவர்களின் திமுக பற்றிய இமேஜை மாற்ற இந்த பேட்டி அவசியம் பயன்படும். ஸ்டாலினுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே என்று அவர்கள் நினைக்கலாம்.


💥இனி இது போலி என்ற பார்வையில்...

அப்ப பெரியார் சொன்ன கடவுளை வணங்குகிறவன் அயோக்கியன் காட்டுமிராண்டி என்று சொன்னதை தற்பொழுது ஸ்டாலின் ஏற்கவில்லை என்று தெரிகிறது

தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் எல்லாம் மாறிவிடும் . இன்னும் என்ன மாற்றங்கள் எல்லாம் வரபோகிறதோ.அடுத்து நெற்றியில் பட்டை போட்டுகொண்டு கூட வருவார்கள்.

விரைவில் இவரின் அங்கப்ரதட்சனை ..பால் குடம் ..காவடி ….எல்லாம் வரும் காண தயாராகுங்கள். காட்சி இலவசம்.

ஓடினாள் ஓடினாள் வாழ்கையின் எல்லைக்கே ஓடினாள்.வசனம் ஞாபகம் இருக்கிறதா.
தற்பொழுது தி மு க எங்கே ஓடுகிறது.ஆட்சிக்காக தனது கொள்கையின் எல்லைக்கே ஓடுகிறதோ.

💥எது எப்படியோ சதுரங்க வேட்டை ஆரம்பம்.





1 கருத்துரைகள்:

Unknown said...

ஒரு விஷயத்தைப் பற்றி ஒட்டி, வெட்டி ஒருவரே பேசுதல் ஒரு நுண்கலை. தற்போது IAS குழு கலந்துரையாடல்களில் இது பின்பற்றப்படுகிறது. அந்த பாணியில் ஒரு தொகுப்பு...என் கருத்து அல்ல.

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்