பாரதி 25 - மகாகவியின் நினைவு நாளில் ஒரு பகிர்வு.



தமிழ் நிலத்தில்  ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த  சொல் உழவன். மண்ணுள்ள காலம்  வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!

சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி. பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகளுக்கு அர்த்தம் தந்த அண்ணன்!

எட்டயபுரம், பிறந்த ஊர், சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர், மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!

சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பால பாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். வாழ்நாள் முழுவதும் பத்திரிகையாளன்!

எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17 ½ ரூபாய் மாதச் சம்பளம். இன்றும் அந்தப் பள்ளி,'பாரதியார் பணியாற்றிய பெருமையுடைத்து!’

ஏழு வயதிலேயே பாடல்கள் புனையம் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள் பாரதி என்றால் சரஸ்வதி!

இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!

14 ½ வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண்டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்!

காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன் முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார். உலக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப்புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!

முதன் முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்திய வரும் பாரதியே, `சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!

பாரதிக்கு பத்திரிகை குரு `தி இந்து’ ஜி சுப்பிரமணிய ஐயர், அரசியல் ஆசான், திலகர், ஆன்மிக வழிகாட்டி அரவிந்தர், பெண்ணியம் போதித்தவர், நிவேதிதா தேவி!

தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடலாகவும். `பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடலாகவும் சொல்லப்படுகிறது. `ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்!

மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரம்ப்படுவார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. மனைவியைத் திட்டுவதையும் நிறுத்தினாராம்!

அந்தக் காலத்தில் ஆசாரத்துக்கு விரோதமானது எதுவோ அனைத்தையும் செய்தார். `என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்’ என்று சொன்னவர்!

லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூன்று தெய்வங்களின் படங்களும் வைத்திருப்பார். கிருஷ்ணர் படத்துக்குக் கீழே பிச்சுவா கத்தி இருக்கும். அதில் பெரிய பொட்டும் இருக்கும். தினமும் இதை வணங்கிய பிறகுதான் வழக்கமான வேலைகள் தொடங்கும்!

கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிய மாட்டார். பூணூல் அணிய மாட்டார். `பூணுலை எடுத்துவிட்டவர்’ என்று போலீஸ் கொடுத்த விளம்பரம் சொல்கிறது!

கறுப்பு கோட் தலைப்பாகை தான் அவரது அடையாளம் வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை ஆனால், சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!

"மிஸ்டர் காந்தி! கடற்கரையில் நாளை பேசுகிறேன். நீங்கள் தலைமை வகிக்க வர வேண்டும்" என்று இவர் சொன்னபோது, "கூட்டத்தை மறு நாளுக்கு மாற்ற முடியுமா?" என்று கேட்டார் காந்தி. ``அது முடியாது ஆனால், நீங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்துக்கு என்னுடைய ஆசி’’ என்று சொல்லிவிட்டு வெளியேறிய பாரதியைப் பார்த்துக்கொண்டே இருந்தார் காந்தி.`` இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்’’ என்று அருகில் இருந்தவர்களிடம் கவலைப்பட்டார் காந்தி!

தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்டமிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!

எப்போதும் மனைவி செல்லம்மாளின் தோளில் கையைப் போட்டுத்தான் சாலையில் அழைத்துச் செல்வார். `பைத்தியங்கள் உலவப் போகின்றன’ என்று ஊரார் கிண்டலடிக்க, இவர் பாடியதுதான், `நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ பாட்டு!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும் போலீஸ் விசாரணையின் போது ``நீங்கள் லண்டனில் படித்தவரா? உச்சரிப்பு இவ்வளவு துல்லியமாக இருக்கிறதே?” என்று ஆச்சர்யப்பட்டாராம் அதிகாரி!

தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், `செந்தமிழ் நாடெனும் போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!

விவேகானந்தரின் கிஷ்யையான நிவேதிதா தேவி இவருக்கு ஒரு ஆல மர இலையைக் கொடுத்திருந்தார். இமயமலையில் இருந்து எடுத்து வந்ததாம் அது தான் மரணிக்கும் வரையில் அந்த இலையைப் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாரதி!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க.... அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் `கோயில் யானை என்ற கட்டுரையைக் கொடுத்தார்!

'ஆப்கன் மன்னன் அமரனுல்லா கானைப்பத்தி நாளை காலையில எழுதி எடுத்துட்டுப் போகணும்’ என்று சொல்லிவிட்டுப் படுத்தார். தூக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு. அன்றைய தினம் இருந்தவர்கள் 20 –க்கும் குறைவானவர்களே!



நன்றி:
பேஸ் புக் நாச்சியார் உடனுறை கூகுள் ஆண்டவர்




எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்...

மாணவர்களின் பார்வையிலிருந்து... 
எப்படி இருக்க வேண்டும் நல்ல ஆசிரியர்... 

மெல்லிய புன்னகை இருக்க வேண்டும். 
சிடுசிடுவென இருக்கும் டெரர் மூஞ்சி மாணவர்களை கலவரப்படுத்தும்.

தேவைப்படும் நேரங்களில் மட்டுமே கோபப்பட வேண்டும். 
அடிக்கடி கோபப்பட்டு, கோபத்திற்குரிய மரியாதையை கெடுத்துவிடக்கூடாது.

பாடத்திட்டத்தோடு நின்றுவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு உலக விஷயங்களையும் சொல்ல வேண்டும். 
சொல்லும் விஷயங்கள் புதியவைகளாக இருக்கவேண்டும்.

மாணவர்களின் மனநிலையை புரிந்துக்கொண்டவராக இருக்க வேண்டும்.
பாடம் நடத்தும் போதும், வீட்டுவேலைகளை கொடுக்கும்போதும் 
மாணவர்களின் மன, உடல் நிலையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


தங்கள் வீட்டின் கோபத்தை, வகுப்பறையின் வாசப்படிக்கு கூட கொண்டுவரக்கூடாது.

தனது மாணவர்களின் எதிர்காலம் தன் கையில் உள்ளது என்பதை உணர்ந்து, தொழில் பக்தியுடன், ஈடுபாட்டுடன் வகுப்பறையில் செயல்படவேண்டும்.

ஒருவேளை ஆசிரியரிடம் ஏதேனும் கெட்டபழக்கம் இருப்பின் அதன் நிழல் கூட தன் மாணவர்களின் மீது விழாமல் பார்த்துகொள்ள வேண்டும்.

எப்போதும் திட்டக்கூடாது, மற்றவர்களுடன் ஒப்பிட்டு, இருவரையும் அவமானப்படுத்தக்கூடாது.

எப்போதும் படி,படி என ஒரேடியாக முகாரி ராகம் பாடி, 
வெறுப்பேத்தக்கூடாது.


எல்லாம் தெரிந்தது போல் பேசக்கூடாது, நீங்கள் பேசுவதில் எத்தனை சதவீதம் உணமை, எத்தனை சதவீதம் டுபாக்கூர் என 
மாணவர்களால் உணர முடியும்.

ரொம்ப வருடத்திற்கு பிறகு எங்காவது ரோட்டிலோ, கடைவீதியிலோ பார்க்க நேரிடும் போது, மரியாதை அதிகரித்திருக்க வேண்டும், குறைந்திருக்கக்கூடாது. 
படிக்கும் போது ஆசிரியர்களை மதிக்காமல் நடந்துக்கொண்டவர்கள் கூட, எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு அவர்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, காலில் விழுந்து வணங்கியவர்கள் உண்டு.



புத்தர் மீண்டு(ம்) வந்தார். - 5 நிமிடப்பதிவு


புத்தர் மீண்டு(ம்) வந்தார்.


"தாங்கள் ஞானம் பெற்றது எங்கு?" ஆர்வமுடன் வினவினேன்.
"போதி மரம்" என்றார்.

"அந்த மரத்தில் கிளைகள் ஏராளம் இருக்குமே?"
"ஏராளமான கிளைகளில் ஏராளமான பறவைகள் இளைப்பாறுமே?"
"இளைப்பாறும் பறவைகள் அடிக்கடி எச்சமிடுமே?"


"ஓ... எச்சங்களை பொருட்படுத்தாது, அமர்ந்திருந்தால் தானோ என்னவோ உங்களுக்கு ஞானம் கிட்டியது...!"


வரிசையாய் வினாக்களை எழுப்பி, நானே விடையைக் கண்டுகொண்டேன். 


நீதி:
அவமானங்களைத் தாண்டு, ஞானம்/ஞாலம் வசப்படும்.


டிஸ்கி:
இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரின் ட்விட்டை கருவாக கொண்டு யோசித்த போது வந்து விழுந்த வார்த்தைகள் இது.

விகடன் பாணியில் இது சிறப்பு வலைப்பாயுதே - அசத்தல் ட்விட்களின் தொகுப்பு

@krajesh4u 
 
என் அறையில் இருந்து இங்கே வாம்மா என்றேன். அம்மா வருகிறார், மனைவி வருகிறார், மகள் வருகிறார் #வாவ்.. லைப் இஸ் பியுட்டிபுள்.


 
எடியூரப்பாவாகியா நான்.. யோவ் இறங்கு, கவுடா மேல போங்க , கவுடாவாகிய நான், யோவ் இறங்கு , ஷெட்டர் நீங்க மேல போங்க..  ப்ளீஸ்


 
பாரம் பெருசா இருந்தா கடவுள் மேலயும் பாரம் சிறுசா இருந்தா கடவுள் துகள் மேலயும் போட்டுவிட்டு அமைதி காக்கவும்..


: தினத்தந்தி பெயர் தினக்கோழி என மாற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை # ஈமுக்கோழி விளம்பரம் போட்டே கொல்றாங்கய்யா


 
நல்ல நட்புக்கு அடையாளம் எப்பொழுது விலகி இருக்க வேண்டும் என்று தெரிந்திருப்பது தான்.


 
அடுத்த தடவ இந்த உலகம் ரொம்ப சின்னதுன்னு சொல்றவங்ககிட்ட ஒரு துடைப்பத்த கொடுத்து பெருக்க சொல்லலாம்னு இருக்கேன் !!


 
கமல் வயதானால் எந்தப்படத்தில்வரும் கமல் போல் இருப்பார் என்று யோசித்தால், சட்டென மனம் சொல்கிறது, ஆமா கமலுக்கு எப்ப வயசாகும்?

 
ஷேவிங் செய்துவிட்டு வீட்டுக்கு போக சாலையை கடக்க காத்திருந்தேன், அடடா மீண்டும் தாடி வளர்ந்து விட்டது.!


 
அடுப்பில் பூனை தூங்குகிறது’என்றால்- அது இந்தியா! ’அடுப்பில் பூனை வேகிறது’ என்றால் -அது சீனா.


 
நேர்மைச் சட்டையை கம்பீரமாய் அணியுங்கள்,இல்லையேல் கழட்டி வைத்திடுங்கள்.தொழதொழாவென அணியாதீர்கள்,சகிக்கல,அதைவிட அம்மணம் அழகு.


 
இஞ்சி தின்ன கொரங்குனு சொல்றத விட ரெகார்ட தொலைச்ச இஞ்சினியரிங் ஸ்டூடண்ட்னு சொல்லுங்க உதாரணம் ரொம்ப அழகா பொருந்தும்


 
பாரம் பெருசா இருந்தா கடவுள் மேலயும் பாரம் சிறுசா இருந்தா கடவுள் துகள் மேலயும் போட்டுவிட்டு அமைதி காக்கவும்..


 
காதலில் தோல்வியுற்ற பெண்களும் தாடி வளர்த்தி இருந்தால் இந்த உலகம் எவ்வளவு அசிங்கமா இருந்திருக்கும் என எண்ணி பார்க்கிறேன்.!


@RenugaRain 
கடவுள் துகள்னு ஒன்னு கண்டுபிடிச்சிருக்காங்களாம்!நெத்தியில வச்சுக்கிட்டா வேண்டிக்கிட்டது நடக்குமாம்!ஒரு கிராம் ஒரு லட்சமாம்!


 
இணையத்தை விட்டுச் செல்பவரை தேடாதீர்கள்..வாழ்வில் ஏதோ உருப்படியாக செய்து கொண்டிருக்கிறார் அவர் !
@krajesh4u 
 
தெரு கிரிக்கெட்டில் ஒரு ரன் அவுட்டுக்கு சாட்சி சொல்லி வாங்கி கட்டிக்கொண்டிருக்கிறேன். சின்ன பசங்க சாவுகாசமே ஆகாது !


 
என்பையன் ஸ்கூல் போயிருக்கும்போது அவன் டாயஸ்க்கு கார்டூன் டிவி எல்லாம் போட்டு காட்டணுமாம் #ரைட்டு :-)


 
தமிழனின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சாதனங்களில் ஒன்று வண்டியின் ஹாரன்!


 
முன்பெல்லாம் கொசு கடித்தால் 'டார்ட்டாய்ஸ்' போடுவார்கள், இப்போ Facebookல் ஸ்டேடஸ் போடுகிறார்கள்.!


 
புத்தர் வந்தார்..சத்தமாய் சிரித்தார்..என்ன என்று கேட்டேன்..நான் "LAUGHING BUDDHA" டா என்றார்!!!




 
சர்க்கார் ரூபாய் நோட்டுகளில் காந்தி தாத்தாவோடு நேரு மாமாவையும் சேர்த்து அச்சடித்தால்,பெருசுங்க பேச்சு துணைக்கு சரியா இருக்கும்!


 
மன்மதன் 2-ல் திரிஷா,அனுஷ்கா,தமன்னா, இலியானா உள்பட 6 நாயகிகள்!#ஆறு அக்காக்களை கரை சேர்க்கும் ஒரு தம்பியின் கதையா இருக்கும்


 
யாராவது உதவி செய்தால் அவருக்கு நன்றி சொல்லாவிட்டாலும்,அந்த உதவியை செம்மையாக பயன்படுத்திக்கொண்டாலே மிக்க நன்றியாக இருக்கும்!!


 
முதிர்கன்னி - வினைத்தொகையல்ல... தொகையின் வினை.!


 
சந்தானம் ஜோக்ஸ் தயாரிக்கத் தேவையான பொருட்கள் => அட்டு ஃபிகர், குவாட்டர், கட்டிங், கவுண்டரின் நையாண்டி சிறு சிட்டிகை


  
பி'ம்பி'ல்'லிக்காபி'லா'பி யின் சுருக்கம் தான் "பில்லா" #ஆயிரம் இரண்டாயிரம்

டிஸ்கி:
இந்த ட்விட்களில் உங்கள் மனம் ஈர்த்த ட்விட் ஒன்றை பின்னூட்டத்தில் குறிப்பிங்களேன்.. இதில் இல்லாத வேறு ட்விட் ஏதேனும் இருந்தாலும் மகிழ்ச்சியே!

புத்தர் வந்தார்.. கொலைவெறி கொண்டார்...



புத்தர் வந்தார்.
"உங்களால் அநாதையாய் விடப்பட்ட உங்கள் மனைவி, குழந்தைகள் சௌக்கியமா? என்றேன்.
"நான் ஆசையைத் துறந்தவன்" என்றார்.
"ஆனால் அவர்கள் ஆசையை துறக்கவில்லையே" என்றேன்.
இப்படியாய், இன்னுமாய் சில கேள்விகள் கேட்டேன்.
அன்றைய இரவை புத்தர் சிறைச்சாலையில் கழிக்க நேரிட்டது.
என்னைக் கொன்ற குற்றத்திற்காக....


டிஸ்கி:
இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவரின் ட்விட்டை கருவாக கொண்டு யோசித்த போது வந்து விழுந்த வார்த்தைகள் இது.


பின்தொடர 50+ பேர் தயார் - ட்விட்டருக்கு வாங்க...

@bharathiee
140 வார்த்தைகளுக்குள் இந்த 'உலகத்தை' வார்த்தைகளில் அடக்க முடியுமா உங்களால்? முடியும் என்றால் உங்களுக்காக இடம் டிவிட்டர் தான்..


வெறும் இரண்டு வரிகளில், அட்டகாசமாக எழுதி, "என்னாமா யோசிக்கறாங்க" என என்னை அச்சர்யப்படுத்தியவர்கள் ட்விட்டர் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.


எந்நாளும் ஒரு கல்லூரி வளாகத்திற்குள் இருக்கும் உணர்வுதான் டிவிட்டரில் இருக்கும் பொழுதெல்லாம் உண்டாகிறது. சிபி ராஜின் ஜீன்ஸை மாட்டிக்கொண்டு திரியும், பல சத்தியராஜ்-களும் கலாய்ப்பு பணிக்காக களத்தில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.


கலாய்ப்பு மட்டுமல்ல, கதை, கவிதை, இலக்கியம், விளையாட்டு என ட்விட்டர்வாசிகள் தொடாத எல்லைகளே இல்லை.


ஆனந்த விகடனின் வலைபாயுதே பார்த்து, தாமும் அதைப் போல் எழுத வேண்டும் என்று ட்விட்ட்ருக்கு வருபவர்களின் எண்ணிக்கை
இப்போது மிக அதிகம். ஆனால் ட்விட்டரில் அதை விட, அசத்தலான எழுத்துகள், யோசிப்புகள், கலாய்ப்புகள் உண்டு.


அதிக அளவு பாலோயர்ஸ் வைத்திருப்பது தான், ட்விட்டரில் பெருமையாக கருதப்படுகிறது. ஏனெனில் உங்கள் எழுத்துகள் உங்கள் பாலோயர்களின் டைம் லைன் வழியே ஓடி, அவர்களின் கவனத்தை ஈர்க்கும்.


நிறைய பாலோயர்ஸ் இருந்தால், நிறைய பேரை சென்றடையும் - சிம்பிள் லாஜிக். அப்புறம் ஆயிரம் பாலோயர்ஸ்- க்கு மேல் இருந்தால், அதில் யாரோ சிலருக்காவது உங்கள் எழுத்து மிக பிடித்திருக்கும்.


உங்கள் எழுத்து பிடித்திருந்தால், அதனை அவர்கள் RT செய்வார்கள்.


RT (Retweet) என்பது உங்கள் ட்விட்டை, அவர்களின் பாலோயர்களுக்கு பரிந்துரை செய்வது... (ட்விட் மிக பிடித்திருந்தால் அவர்கள் உங்களை நேரடியாக பாலோ செய்வார்கள்)


ட்விட்டருக்கு வரும் ஆரம்ப நாள்களில் வெறும் ஆர்.டி. மட்டும் செய்து, நன்றாக எழுதுபவர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள் ஏராளம்.


ஆர்.டி. மட்டுமே செய்து, கிட்டத்தட்ட மூவாயிரம் பாலோயர்ஸ் ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
பதிவுலகம், முகப்புத்தகம் என எந்த இணைய உலகத்தை எடுத்துக்கொண்டாலும், மிக தீவிரமாக இயங்குபவர்கள் என ஆன்லைனில் அதிக நேரம் இருப்பவர்கள் என சில சொல்ல முடியும். எழுதுவதும், எழுதுபவர்களுக்கு பாராட்டுவதும் இவர்களோ தான் அதிக அளவில் செய்து கொண்டிருப்பார்கள். அது மாதிரி, ட்விட்டரிலும் உண்டு.


எப்போதும் ட்விட்டரின் டைம்லைனில் தென்படுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை பாலோ செய்யுங்கள்.(கீழே இருக்கும் பட்டியலில் அவர்கள் பெயர்களும் இருக்கின்றன., அவர்களை தொடர்க...)


நீங்கள் பாலோ செய்தால், உங்களை திரும்பவும் ஃபாலோ பேக் செய்ய, உங்கள் எழுத்துகளை ஆர்.டி. செய்ய கீழ்கண்டவர்களை பாலோ செய்யுங்கள். (இனி ட்விட்டரில் நீங்கள் தனி ஆள் இல்லை.)

விகடன் பாணியில் வலைபாயுதே - கலக்கல் ட்விட்டுகளின் தொகுப்பு...

பாரத்...பாரதி...

 "நன்றி" காய்ச்சல்ன்னு ஒன்னு வந்தா அது சரத்குமாருக்கு தான் முதல்ல வரும்!!


   இந்த உலகம் எவ்ளோ அமைதியானது என்பது பொதிகையில் செய்திகள் பாக்கறப்பதான் தெரியுது..


  நல்லவேளையாக இரும்பு வில்''லை காமனின் ஆயுதமாக வைக்கவில்லை..கரும்புவில்''லுக்கே இவ்வளவு சேதாரம்


   மீண்டும் குழந்தைப்பருவதிற்கு போக ஆசைபடுபவர்கள், ஒரு முறை உங்கள் குழந்தையின் HOMEWORK டைரியை பார்த்துவிடுங்கள்.!!!


  செவ்வாய்கிரகம் அளவுக்கு தூரமா இருந்தாலும், சொந்தவீடு வாங்கிடனும்ங்கற வெறியை நமக்கு வரவைக்கிற பெருமை வீட்டுஓனர்களையே சேரும். 


  ஒவ்வொரு தமிழக கல்யாணத்திலும் பழைய பகைகள் பைசல் செய்யப்பட்டு, புதிய பகைகள் பிரசவிக்கப்படுகின்றன.


   கோடை விடுமுறையிலும் குழந்தைகளை ஏதாவது சம்மர் கோர்ஸில் தள்ளினால் அவர்கள் உங்களை முதியோர் இல்லத்தில் தள்ள கூடும்.


  சிலுவை சுமக்க தயாராயிருந்தால் மட்டும்தான், செத்தும் பிழைக்கக்கூடிய வரம் கிடைக்கும்.! #ஈஸ்டர்
பாரத்...பாரதி...
  தங்கள் குழந்தைகள் புத்திசாலிகள் என்று நிரூபிக்க பெற்றோர்கள் குட்டிகரணம் கூட அடிப்பார்கள் போல.


  யாரும் துரோகம் இழைப்பதில்லை! அவர்களை எவ்விடத்தில் வைக்க வேண்டும் என்பதை இலைமறைகாயாக உணர்த்துகிறார்கள்!


  இரவை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும் பகலின் கால்கள் தெரிகிறது நிலவாய் !


  எல்லோரும் பினாமி பேர்ல சொத்து வச்சிருப்பாங்க, ஆனா அதிமுக -ல மட்டும் தான் பினாமி பேர்ல கட்சியே வச்சிருக்காங்க # ச. ம. க.


 மாசக்கடைசி என்பது இரண்டாம் தேதியிலிருந்து துவங்குவதாய் சொல்கிறது ஆண்களின் வரலாறு..!


   கடவுள் பாரபட்சமில்லாதவர்தான்.... சிறப்பு தரிசன சீட்டு பெற்றவருக்கும் சிலையாகவேதான் காட்சி அளிக்கிறார்


  எந்த கோவிலிலும் கண்டதில்லை உண்டியலுக்கு முன் கடவுளை.....!


 " விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும். ""
பாரத்...பாரதி... ‏
  பாட்டுல பின்னாடி டான்ஸ்தான் ஆடுவாகனு பார்த்தா இந்த கெளதம்மேனன் எடுக்குற பாட்டுல பூராம் பின்னாடி பல்டி அடிச்சுகிட்டு கெடக்காய்ங்க


  டைம்பாம் வச்ச வீட்ல இருக்க மாதிரி ரசிக்கிறேன் வாழ்க்கையை.8.15- 9.00 மின் தடை ஓவர்.அடுத்து 9.45




  நல்லா படி என்று மகனிடம் அட்வைஸ் செய்தால், என் 10th மார்க் லிஸ்ட் கேட்கிறான் :( 
  
 http://bharathbharathi.blogspot.com

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்