தேர்ந்தெடுக்கப்பட்ட அசத்தல் கவிதைகள் 1 - மினிமீன்ஸ் ர

கடவுளைத் தேடி ...
 -மீரா.

"இருக்கிறார் கடவுள்

இல்லை கடவுள்?"

வாதம் பிறந்தது;

மோதல் வளர்ந்தது.


இப்போது

இல்லை ஒருவர் இங்கே

இருக்கிறார் ஒருவர்

தலைமறை வாக!


போத்தனூர்க் காவலர்

புலனாய் கின்றார்!

..........


புரியாத வார்த்தைகள்...
-துறையூர் மணி

பந்த், ஸ்ட்ரைக்,
காதல் தோல்வி,
கற்பழிப்பு,
ஹோமோசெக்ஸ்,
தீக்குளிப்பு,
கள்ளத்தொடர்பு,
இவையெல்லாம் என்னவென்று கேட்டான்
ஒரு ஆதிவாசி,
எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்து
செய்தித்தாள் வாசிக்கச் சொன்னபோது..!

                                                                         
..........


கோணம்
-சல்மா.

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்....


சிறகுகள்
-இர.பூபாலன்


ஏழு கடல்
ஏழு மைல் தாண்டி
மந்திரவாதியின்
உயிரைத் தேடிப் போனவன்
எப்படிப் போனான்
என்று கேட்கவே இல்லை
எந்தக் குழந்தையும்
அவர்கள் வசம் சிறகுகள்
இருந்தன..!


ஞாபகங்கள்.
-ரவி சுப்பிரமணியன்.
புதைத்துப் பார்த்தேன்
முளைக்கிறது
எரித்துப் பார்த்தேன்
உயிர்க்கிறது
கரைக்கலாம் என்றால்
மிதக்கிறது
சுமக்கலாம் என்றால்
கனக்கிறது.
பாவி
என்னடீஈஈஈஈஈஈ செய்வேன்
உன் ஞாபகங்களை.

-ரவி சுப்பிரமணியன்

0 கருத்துரைகள்:

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்