நான் தற்கொலை செய்ய போன போது - மினிமீன்ஸ் ஜாலி பதிவு.

பயணம்னு சொன்னா பத்தாவது படிக்கையில் என் தற்கொலைக்கான பயணத்தை சொல்லலாம்.

அப்பாவுக்கும் எனக்கும் எப்பவுமே ஒத்துவராது. மூத்த பையன்களுக்கு அப்பாவின் பாசம் அபூர்வம்தான்.

விளையாட்டுக்கு அனுமதிக்காத அப்பாவை நான் புத்தகங்கள் படித்து ஏமாற்றுவேன்.

பாடப்புத்தகங்கள் தவிர வேறு படிக்கக் கூடாது அப்பாவுக்கு.

நமக்கோ சங்கர்லால், கணேஷ் வசந்த், பரத் சுசி, நரேன் வைஜயந்தி எல்லாம் ஃப்ரண்டு.

அப்படித்தான் ஒரு நாள் புத்தகம் படிக்கும் போது மாட்டிக்கிட்டேன்.

தம்பி தங்கை முன்னாடியே அடி பின்னி எடுத்துட்டாரு அப்பா.
இனி இந்தாளு கூட வாழக்கூடாதுனு தற்கொலை செய்ய முடிவு பண்ணியாச்சு.

வீட்டுலருந்து மாக்கினாம்பட்டி ரயில்வே ட்ராக்கு 5கிமீ.
நடந்துதான் போகணும்.

கோபமா போகைல ஒரு எண்ணம்.
குமுதத்துல சாண்டில்யன் எழுதும் விஜயமகா தேவி தொடர் வந்துட்டிருந்தது அப்ப.

அடடா... இப்ப செத்துட்டா கதை முடிவு தெரியாம போயிடுமேனு யோசனை.

சரி... விஜயமகா தேவி முடிஞ்சதும் தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி... ஒரு கிலோ மீட்டர்ல யூடர்ன் போட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.

விஜயமகா தேவி முடிஞ்ச பின்னால ஏன் தற்கொலை பண்ணிக்கலைனு யாருக்காவது தோணலாம்.

அங்கதான் ஆண்டவன் வச்சாரு ஒரு ட்விஸ்ட்டு.

கதைய முடிக்கும் முன்னாடியே சாண்டில்யன் இறந்து போய்ட்டாரு.

ஆக, பல சரித்திரக்கதைகள் எழுதின சாண்டில்யன் தான் என் சரித்திரக் கதையை இப்ப நான் எழுதவும் காரணம்.
-மினிமீன்ஸ்

0 கருத்துரைகள்:

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்