நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.

💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:–

💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன்.

💥வாழ்வில் ஜெயித்தவர்களும், நம் முன்னால் போகிறவர்களும் என்ன செய்தார்கள் என பார்க்கலாம். அவர்களையே பின்பற்ற தேவையில்லை.

💥முதலில் நாம் யார் என்று நமக்கு நாமே கேட்டுப்பார்க்க வேண்டும். சரியா? தவறா? என்ற முடிவை நாம்தான் எடுக்க வேண்டும். நம் முன்னால் இருக்கும் பிம்பத்தை உடைத்து, நமக்குள் இருக்கும் திறமையை நம்ப வேண்டும். அப்போதுதான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.

💥 என்னுடைய தந்தைதான் என் ‘ரோல் மாடல்’. அவர் என்னை எப்போதும், எந்த செயலிலும் தடுத்ததில்லை. நான் சம்பாதித்தால்தான் வீட்டை காப்பாற்ற முடியும் என்றிருந்த சூழலில், சினிமா துறைக்கு செல்ல வேண்டும் என சொன்னபோது தைரியம் கொடுத்தவர் என் தந்தை. அப்பாவிடம் இருந்து வாழ்க்கை குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்.

💥 புதுப்பேட்டை படத்தில் தனுசுடன் ஜூனியர் நடிகராக நடித்தவன் நான்..

 அப்புறம்அவரது தயாரிப்பில் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்தேன். இது எனக்கு கிடைத்த கவுரவம்.

0 கருத்துரைகள்:

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்