கந்தன் கருணையும், அணுக்கரு உலையும் பின்னே ஜப்பானும்...


கந்தப்புராணம் படிச்சிருக்கீங்களா? அட இல்லாட்டி பரவாயில்லைங்க, கந்தன் கருணை படம் பாத்திருக்கீங்களா?

அதுல கந்தன் தன் வெற்றிவேல் கொண்டு தாக்கி, சூரபத்மனை வதம் செய்த பின், கடைசியில் மனம் திருந்தும் அந்த அசுரன் மன்னிப்பு கேட்கிறான். (கவனிக்க, சில வில்லன்கள் கிளைமாக்சில் கூட திருந்துவதில்லை)

பின்னர் கந்தன் அடியவர்கள் தன்னையும் வணங்க வேண்டும் என்று வரம் வாங்குகிறான். மயிலாகவும், சேவலாகவும் பிரிகையடைகிறான் சூரபத்மன்.

இது ரொம்ப இழுவையா இருக்கு அப்படினு நினைக்குறவங்களுக்காக,

வேல் -------> சூரபத்மன் ------------> மயில் + சேவல் + ரொம்ப ரத்தம்.

இந்த கதையை அப்படியே உல்டா பண்ணுங்க, அது தான் அணுக்கரு உலையில் நடைப்பெறும் அணுக்கரு பிளவை வினை. (Nuclear fission)

நியூட்ரான் கொண்டு, யுரோனியத்தை தாக்கும் போது, அது பிளவுற்று,
பேரியம், கிரிப்டானாக பிளவுறும் நிகழ்ச்சியே அணுக்கரு பிளவையாகும்.
அதனுடன் மூன்று வேகநியூட்ரான்களும், அதிக அளவிலான ஆற்றலும் வெளியாகும்.



இந்த வினையின் போது உண்டாகும் 200 MeV ஆற்றலை பெறவே அணுக்கருவினை நிகழ்த்தப்படுகிறது. (வினையின் போது வெளியாகும் கதிர்வீச்சுக்கள் தான் அபயமானவை)

அணுக்கரு பிளவையில் வெளியாகும் வேகநியூட்ரான்களை கட்டுப்படுத்தாமல் விட்டால், தொடர்ச்சியாக வினை நடந்துகொண்டே இருக்கும், இதனை தொடர்வினை என்கிறார்கள். (Chain Reaction)

இந்த அணுக்கரு பிளவுவினையை கட்டுப்பாடான முறையில் நடத்தும் அமைப்பு தான், அணுக்கரு உலை(Nuclear Reactor) எனப்படுகிறது. வினையின் போது உண்டாகும் அதிக அளவு வெப்பத்தை குறைக்க சாதாரண நீர், கனநீர் மற்றும் திரவ சோடியம் ஆகியன குளிர்விப்பான்(The Cooling System) என்னும் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த குளிரூட்டும் திரவம் அணுக்கரு உலைகளில் இருந்து வெளியேறி விட்டது தான் ஜப்பானில் ஏற்பட்ட பிரச்சனையாகும்.

ஜப்பானின் புக்குஷிமா அணுமின் தயாரிப்பு நிலையத்தில் உள்ள ஆறு
அணுமின் உலைகள் உள்ளன. சுனாமி தாக்கியபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கத்தின் போது, 3 உலைகளில் உள்ள
குளிரூட்டும் அமைப்புக்கள் செயலிழந்ததால்தான் அவற்றின் வெப்பம் மிக அதிகரித்து உலைகள் வெடித்துள்ளன.

அந்த உலைகளின் உட்புறத்தில், அணுக்கரு பிளவைக்கு தேவையான மூலப்பொருட்களான சீசியம் - 137 மற்றும் அயோடின்- 131 ஆகிய தனிமங்கள் கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.

வெடிவிபத்தின் போது அணுக்கழிவு கலந்த நீர் வெளியேறியிருப்பதும் இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பானில் 2007ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, காஷிவசாகி - கரிவா அணுமின் நிலையத்தில் இதேபோன்று திரவக்கசிவு ஏற்பட்டு அது கடலில் கலந்ததால் அபாயம் எதுவும் ஏற்படவில்லை. இப்போதும் மக்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படாது என்றும் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உதிரிப்பூக்கள் :

ஜப்பான் அணுக்கரு உலைகளின் வெப்பத்தைத் தணிக்க கடல் நீரை பயன்படுத்துவது ஆபத்தானது என்று அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அணுக்கரு உலையில், மூலப்பொருள் எனப்படும் பிளவைக்கு உட்படும் கனமான தனிமம் (Fuel )வெளியேறினால் அது பேரழிவை உண்டாக்கும்.

அணு உலை நிறுத்தப்பட்டாலும் அணு மூலப்பொருளிலிருந்து வெளியாகும் வெப்பம் 5 சதவீதம் வரை இருந்துக்கொண்டே தான் இருக்கும். இதிலிருந்து வெளியேறும் காமா கதிர்கள் தான் தலைமுறைகளையும் தாண்டி பாதிப்பை உண்டாகும் தன்மையுடையது.

1986-ல் உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலை வெடித்த
சம்பவத்திலும், 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பென்ஸ்சில்வேனியா மாகாணத்தின் இருந்த மூன்று அணுக்கரு உலைகளில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திலும் அணு உலையின் மூலப்பகுதி வெப்பமடைந்து வெடித்ததால் அவை பெருத்த பாதிப்பை ஏற்படுத்தின.

செர்னோபில் அணு உலையின் பாதுகாப்பு சுவர்களை விட, ஜப்பானின் அணுக்கரு உலைகளின் பாதுகாப்பு சுவர்கள் வலுவானதாக கருதப்படுகிறது. (சாதாரணமாக பாதுகாப்பு சுவர்கள் இரண்டு முதல் இரண்டரை மீட்டர் நீள கான்கிரீட் சுவராக இருக்கும்)

2441 டன் நிலக்கரியை எரித்து அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை வெறும் 1 கிலோகிராம் யுரோனியத்தை அணுக்கருபிளவைக்கு உட்படுத்தி பெறமுடியும். மற்ற ஆற்றல் மூலங்களை விட, அதிக பயனை தருவதால், இனி வரும் நாட்களில் அணுக்கரு உலை என்பது தவிர்க்க இயலாததுதான்.

ஜப்பானின் புக்குஷிமா அணுமின் தயாரிப்பு நிலையத்தைச் சுற்றி உள்ள 1.70 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் வட கடலோர மாநிலங்களில் சுனாமி காரணமாக ஏற்பட்ட இழப்பு இந்திய மதிப்பில் 9 லட்சம் கோடி என மதிப்பிடப்படுள்ளது.
(ஸ்பெக்டரம் தொகை சட்டென்று உங்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. வேண்டுமெனில் சாதாரண நீர் அல்லது நீர் மோரை வெப்பம் தணிக்கும் திரவமாக பயன்படுத்திக்கொள்ளலாம்)

இந்தியாவில் 20 அணு உலைகள் இயங்குகின்றன, அதில் தாராப்பூரில் உள்ள 2 உலைகள் ஜப்பான் தொழில்நுட்பத்தில் இயங்குபவை. (ஜப்பானில் 53 அணு உலைகள் உள்ளன)

அண்மைச்செய்தி:

ஜப்பானின் ஃபுகுஷிமா டாய்ச்சி அணு உலையின் நான்காவது உலையில் பெரும் தீ ஏற்பட்டுள்ளதால், அது எந்நேரமும் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டிஸ்கி :

கந்தன் கருணை என்பது அணுக்கரு பிளவையை எளிமையாக விளக்கும் முயற்சி மட்டுமே. ஆத்திகம், நாத்திகம் பேசிக்கொண்டு யாரும்  பின்னூட்டகளத்தில், அணுகுண்டு வெடிப்பு நிகழ்த்த வேண்டாம்.

*****************************************************************************

முந்தைய அறிவியல் முயற்சிகள் :

கடுகு சைஸ் பொருளை வச்சு இந்த உலகத்தை அழிக்க முடியுமா?



ஸ்பெக்ட்ரம்(SPECTRUM) ; அட இது வேறங்க...



கலாய்க்கும் கலக்கல் ட்விட்டுக்கள்..

வஞ்சனையில்லாமல் எல்லோரையும் கலாய்க்கும் டிவிட்டுக்கள்... 
-பகிர்வுக்காக
கார்டூன் கண்டெடுத்த இடம்:
http://therthal.vikatan.com/index.php?eid=361


swamiomkar 
கட்சிக்கு இவ்வளவு சீட் வேணும் அவ்வளவு வேணும்னு சண்டை பிடிக்கிறதுக்கு பதில் இவங்களே ஆர்டர் குடுத்து செஞ்சுக்க வேண்டியது தானே? #யோசனை


am_englishkaran 
ஷாரூக்கானுக்கு மோசமான நடிகர் விருது # ஹாஹாஹா நாங்கெல்லாம் இதுக்கு பதிலா கலைமாமணி தருவோம்ல தலைவர் ஆல்வேஸ் ராக்ஸ்


baleprabu 
வெயில் ஆரம்பம் ஆயிடிச்சு இனிமே இந்த டாக்டர்கள் தொல்லைய தாங்க முடியாது. அத சாப்பிடு, இத சாப்பிடாதனு சொல்லுவாங்க



காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகும் கே.வி.தங்கபாலு # ஜப்பானில் மேலும் இரண்டு அணு உலைகள் வெடிக்கும் அபாயம்


mayavarathaan
கடற்கொள்ளையர்கள் 61 பேர் சுற்றி வளைப்பு. இன்னும் 2 பேரு தப்பிச்சு ஓடிட்டாய்ங்களா?!#TNae11


iamkarki 
தோழ‌ர்க‌ளும், வைகோவும் சினிமாவுக்கு வ‌ராத‌ வ‌ரை ச‌ந்தான‌த்திற்கு கொண்டாட்ட‌ட்ட‌ம் தான்


araathu 
தேர்தல் ஒழுங்கா நடக்கணும்னா டாஸ்மாக்கை மூடணும். ஆட்சி ஒழுங்கா நடக்கணும்னா டாஸ்மாக்கை திறக்கணும்.


bharathbharathi 
ரூ.15கோடி வாகனசோதனையில் சிக்கியது # நாட்ல பணபுழக்கம் இல்லைனு யாரு சொன்னது? # சாமானியனின் மனப்புழுக்கம்.#tnfisherman


selvu 
சோம்பேறியாக தூங்கிக்கிட்டிருந்தா சோறு கிடைக்காது தம்பி- எம்.ஜி.ஆர்; அப்படின்னா கையை கால ஆட்டிட்டே சுறுசுறுப்பா தூங்கலாம்னு சொல்லுறீங்களா?


Aaryan66 
டி ஆரை எந்த கூட்டணியும் கண்டுகொள்ளாததை கண்டிக்க வேண்டியது வாக்காளர்களாகிய நம் கடமை.


thirumarant 
காங் நாடார்களுக்கு 4 இடம் ஒதுக்க வேண்டும்: பெ.ம.க கோரிக்கை # பிச்சை எடுத்தானாம் பெருமாளு, அத புடிங்கி தின்னானாம் அனுமாரு


araathu 
தலைமைப்பண்பை ,கலைஞரை பார்த்து தோனி கற்றுக்கொள்ள வேண்டும்.தன் அணியினரை அவர் பிரச்சனையின்போது விட்டுக்கொடுத்ததில்லை. # ராசா


isr_selva 
ஜப்பான் சுனாமியை விட சுனாமியை மைய்யமாக வைத்து வரபோகும் கோடம்பாக்க காதல் படங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது


kolaaru 
திமுகவுக்கு ஆதரவு:திராவிடக்கழக பொதுக்குழு தீர்மானம் # வீரமணிக்கு இன்னிக்கு பிரியாணி வித் லெக்பீஸ் கிடைக்கும் அறிவாலயத்துல


losangelesram 

ஜப்பானில் நடந்ததைப் பார்க்கும்போது நம் கல்பாக்கம், கூடங்குளம் எல்லாவற்றையும் நினைத்தாலே கதி கலங்குகிறது!

Kaniyen 
16-ம் தேதி சரத்குமாருக்கு பாராட்டு விழா- நாடார்பேரவை# சிபிஐ விசாரணை பண்ணியதற்கெல்லாமா பாராட்டுவிழா நடத்துவாங்க? ஓ! இவரு நடிகர் சரத்குமாரா?


minimeens
வேலையாள் சச்சின் போல. வயதானாலும் ஓடணும். மேனேஜர் டோனி போல. தோத்தாலும் சச்சினோட செஞ்சுரி ராசின்னு புள்ளிவிவரம் 
சொல்லுவான் #வேலை விதிகள்





idlyvadai.blogspot.com

தமிழகத்திலும் சுனாமி..


தமிழக சமீப வரலாற்றில், இது வரை இல்லாத அளவில் மிக பயங்கர கூட்டணி நிலநடுக்கமும், அரசியல் சுனாமியும் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்சிகள் குற்றுயிரும், குலையுயிருமாக காணப்படுகின்றன. பல கட்சிகள் காணாமல் போயிலுள்ளன.

பயங்கர பேரழிவு:

நேற்று 2.34 மணியளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில், திமுக கூட்டணிதான் முதலில் பாதிப்படைந்தது. ரிக்டர் அளவுகோலில் இது 1.21 புள்ளிகள் என்ற அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அனைவரும் எப்படி இருந்த நாள் இப்படி ஆயிட்டேன் என்று கதறும் அளவுக்கு சில நிமிடங்களிலேயே நிலைமை மோசமாகிவிட்டது.

அறிவாலயத்திலில் உள்ள கனிமொழி அணுக்கரு உலையில் நேற்று தீப்பிடித்தது, இந்த வழியாக வந்தவர்கள், அந்த வழியாக சென்றதால் பெரும்பாதிப்பு இருக்காது என நம்பப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி டெல்லியிலுள்ள ராகுல் காந்தியின் வீட்டில் உண்டானதாக அறியப்படுகிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக அறியப்பட்ட ஈரோடு இளங்கோவன் வளாகம் நேற்றைய நிலநடுக்கத்தின் போது கப்சிப் என்று காணப்பட்டது.

63 நாயன்மார்களுக்கும் ஆண்டி கோலத்தை அளிப்போம் என தமிழ்
உணர்வாளர்கள் வானிலை முன்னறிவிப்பு செய்துள்ளதால், பீதி காரணமாக நேற்று சத்தியமூர்த்தி பவனில் , அரசியல் மீன் பிடித்தல்
தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று கதர் சட்டைகள் சாக்கடைக்குள் இறங்காமல் இருந்தனர். ஆயினும் சட்டையை கிழித்தல், கொடும்பாவி எரித்தல், உள்குத்து, வெளிக்குத்து ஆகியன சிறிய இடைவெளிக்கு பிறகு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு தலைநகரான அதிமுக கூட்டணியின் கரையோர பகுதிகளில் அதிக அளவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் பாதிப்பு கடுமையாக இருந்தது.

எல்லோரும் வாய்ப் பொத்தி உட்கார வேண்டும்,என்ன நடந்தாலும் யாரும் அழக்கூடாது என அதிமுக பகுதியின் தலைமை நிர்வாகி எச்சரித்து இருப்பதால், அங்குள்ள சிலரின் கண்ணீரின் அளவை வைத்து மட்டுமே பாதிப்பை உணர முடிவதாக நமது சிறப்புச்செய்தியாளர் தெரிவிக்கிறார்.

எவ்வளவு அடிச்சாலும் தாங்குவதால் ரொம்ப நல்லவனாகிய மதிமுகவிற்கு இன்னும் சில ஊமைக்குத்துக்கள் விழும் எனவும் அறியப்படுகிறது. (அடுத்த அம்மாவசையிலாவது நல்லகாலம் பொறக்குமா?)

பச்சைத்தமிழர்களுக்கு பாதிப்பில்லை.

தமிழ்குடிதாங்கி மாவட்டத்தில் சிறிது அதிர்வுகள் உணரப்பட்டாலும், மக்களவை உறுப்பினர் கனவு இன்னும் தொடருவதால் பெரும் பாதிப்பில்லை.

வைகோவுக்கு முன்பு 41 கி.மீ. வேகத்தில் சம்பவ இடத்தை கடந்துவிட்டதால், விருதகிரி வருத்தகிரியாக மாறாமல் தப்பித்துள்ளார். எனினும் முரசு கிழியாமல் இருக்க, தற்போது நேர்காணல் நிவாரண முகாம்களை நடத்தி வருகிறார்கள்.

அனைத்து நாடார்கள் கூட்டமைப்பு என்ற கட்டையைப் பிடித்து தாம் கரையேறி தப்பித்ததாக சரத்குமார் வலுகட்டாயமாக நமது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காணமல் போனவர்கள் :

சுனாமியை சுளுக்கெடுப்பேன், சுனாமியில் மூங்கு நீச்சல் போடுவேன் என்று பீலா விட்ட நடிகரை, வட்டாள் நாகராஜ் வம்சத்தினர் தேடிக்கொண்டிருப்பதாக பரபரப்பு கில்லி ஆடுகள பகுதிகளில் நிலவுகிறது. இதுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.


"உப்புத்தண்ணி குடிக்குறது எனக்கொன்னும் புதுசில்லை' என்று உளறியபடியே தன்னந்தனியே ஒருவர் கடலுக்குள் நுழைந்துள்ளார்.
அவரின் தெளிவான அடையாளம் இதுவரை அறியப்படவில்லை.

காணமல் போன கம்யூனிஸ்டுகள், விஜய டி.ஆர்., புரட்சி பாரதம் மற்றும் சில சின்ன பயபுள்ளகள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் ஏஜென்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தன்மான அறிக்கைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்றுவந்த வீரமானவர் இந்த சுனாமியால் முற்றிலும் உருக்குலைந்துள்ளதால், மூக்குடைந்த திருமாவுடன் தானே
தலைமறைவாகியுள்ளார்.

2011 எனக்குத்தான் என்று இதுவரை காலண்டர் தாள்களை கிழித்துக்கொண்டிருந்தவர்களும் தேடப்படுவோர் பட்டியலில் இருக்கின்றனர்.

அண்மைச்செய்தி:


இந்த தேர்தல் சுனாமியால் மனமுடைந்துள்ள நடுநிலையாளர்கள்
பச்சை போர்ட் கடையின் பக்கம் கரை ஒதுங்கியுள்ளனர்.

சின்னதொரு சொர்க்கம்.



ரஷ்ய இலக்கியங்களில் எல்லாம் மிக பெரிய சந்தோஷத்தை ஒருவன் அடைந்தான் என்பதை விளக்க அதிக அளவில் பயன் படுத்தப்பட்டிருக்கும் உவமை என்னவென்றுத் தெரியுமா?.."பள்ளியை விட்டு வரும் மாணவன் போலே...

நடிகர் சூர்யா கூட அவரின் பள்ளி வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியை ஒருமுறைச் சொன்னார், அவர் பள்ளியில் படிக்கும் போது ஒரு நாள் பள்ளி முதல்வரின் மகன் திடீரென இறந்து விட்டதால், இன்று பள்ளி விடுமுறை என்றவுடன் மாணவர்கள் அனைவரும் சந்தோஷமாக கைத்தட்டினார்கள்.

பள்ளி என்பது சின்னதொரு திகார் சிறையாகவே பெரும்பாலான மாணவர்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் எங்களுக்கு சொர்க்கமாகவே தோன்றுகிறது.

மாணவர்களை புரிந்துக் கொண்ட ஆசிரியர்களும், ஆசிரியர்களை புரிந்துக் கொண்ட மாணவர்களும் இருக்கும் இடத்தை சொர்க்கம் என்று தானே சொல்ல வேண்டும்.

அரசுப்பள்ளி என்றாலே ஔவையார் காலத்தில் இருப்பதைப் போன்று இருக்கும் என்ற எண்ணத்தை மாற்றுங்கள். எங்கள் வகுப்பறை "எந்திரன்" யுகத்து வகுப்பறை.

லேப் டாப், புரஜெக்டர் என நவீன தொழில்நுட்பங்களை கற்பித்தலுக்கு பயன்படுத்தும் ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள். எங்கள் வகுப்பறையின் Window -வில் சின்னதொரு அறிவிப்பு பலகையில்இடம் பெற்றுக் கொண்டிருந்த, எங்களின் கவிதைகள், கட்டுரைகள் இப்போது Microsoft Windows வழியாக, இந்த வலைப்பூ வாயிலாக, இப்போது உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது என்பதே இதற்கு
ச் சான்று. 

சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் நரகம்...
எங்களைப் பொறுத்தவரை சாகிற நாள் தெரிஞ்சு போச்சு-னா வாழ்ற நாள் சொர்க்கம்.. எங்கள் பள்ளி வாழ்க்கை(+2 வாழ்க்கை) இன்னும் வெறும் 150 நாள்கள் தான். இருப்பினும் மிச்சம் இருக்கிற நாட்களை ரசனையோடு இருக்கப்போகிறோம்..
எங்கள் ஆசிரியர்களையும், பாடங்களை கொண்டாடி மகிழப்போகிறோம்..

இடவசதி குறைவு போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தாண்டி; எங்கள் பள்ளி வெற்றி நடைப்போடுகிறது. சென்ற மார்ச்-2010 பொதுத்தேர்வில் எங்கள் மாணவியர்கள் 200-க்கு 198 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர். மாநில முதல் இடத்திற்கும் எங்களுக்கும் இடைவெளி வெறும் இரண்டு மதிப்பெண்கள் தான்..

"தங்கம் எனக்கு வேண்டாம்... தங்கப்புதையல் எனக்கு வேண்டும் என்று எங்கள் ஆசிரியர்கள் சொன்னபோது, நாங்கள் "ரின்" விளம்பரத்தில் வருவதுப் போல , இரண்டு மார்க் தானே அதுவும் இந்த முறை வந்துவிடும் என்று அவர்களுக்கே நம்பிக்கையூட்டியிருக்கிறோம்.

இந்த முறை நிறைய பொறியியல் , மருத்துவ மாணவர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்...

எங்கள் எண்ணங்கள் கைக்கூட நீங்களும் எங்களுக்காக இறைவனை வேண்டி
க்கொள்ளுங்கள்.

12-அ1,அ,மற்றும் ஆ பிரிவு மாணவிகள்.
நகரவை மகளிர் மேல் நிலைப்பள்ளி,
மேட்டுப்பாளையம்.



*****************************************************************************************************

டிஸ்கி:
இது மீள்பதிவு. தேர்வுக்கு 150 நாட்கள் மீதி என்பது கடந்து, இப்போது தேர்வெழுதிக்கொண்டிருக்கிறோம். 


மொழிப்பாடங்கள் முடிந்து, முக்கிய பாடங்கள் தொடங்கி விட்டன. 


இன்று இயற்பியல், உங்கள் வாழ்த்துக்களையும் எங்களுக்காய் மீள்பதிவு செய்வீர்களா?   

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்