குல தெய்வ வழிபாடு - ஒரு சிறு தொகுப்பு


💥 குல தெய்வ வழிபாடு என்பது ‘நன்றி’ சம்பந்தப்பட்டது.

💥 வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட முன்னோர்கள் வணங்கி வந்த அவர்கள் ஊர் தெய்வமே ‘குல தெய்வம்’ எனப்படும்.


💥 பெண்களுக்கு திருமணம் ஆனதும் - அவருக்கு - அவரது கணவர் வீட்டு குலதெய்வமே உரிமையானது.

தலைக்கட்டு பூஜைகள் அங்கேதான் தொடங்குகின்றன. எனவே - தாங்கள் தங்களுடைய மாமனார் வீட்டு குலதெய்வ கோயிலுக்குச் சென்று வரலாமே தவிர, அந்தக் கோயில் தங்களுக்கு பாத்யப் பட்டதாக ஆகாது!...


💥 எங்கும் நிறைந்த ஆண்டவன் இருக்குமிடமெல்லாம் குல தெய்வக் கோவில் என்று பதில் சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனெனில் குலதெய்வம் என்பது ஒரு நிலையில் தங்களது முன்னோரே ஆவர்.

💥 குல தெய்வ கோவிலுக்கு வருடத்துக்கு ஒருமுறையாவது சென்று வரவேண்டும் என்பார்கள்.

💥பிழைப்பு தேடி வெவ்வேறு ஊர்களுக்கு இடம்,புலம் பெயர்ந்து திசைக்கொன்றாய் போன பின்னும், குலதெய்வ வழிபாடு என்பது அவர்களை இணைக்கும் பிணைப்பாக இன்றைய சூழ்நிலையில்  இருக்கிறது.

0 கருத்துரைகள்:

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்