கலாச்சாரக்காவலர்கள் மன்னிக்கவும்.


விலைவாசி உயர்ந்திருக்கிறதே என்று அரசியல்வாதிகளிடம் கேட்டால், மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறதோ இல்லையோ, மக்களிடம் சில கொடுமைகளை தாங்கும் சக்தி உயர்ந்திருக்க்கிறது.

ந்த வகையில் இன்னும் ஒரு மாற்றமும், இன்றைய தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கிறது. காதலிக்கும் வயது குறைந்திருக்கிறது.

முன்பெல்லாம் சில பிஞ்சுகள் மட்டுமே பழுத்தன. இப்பொழுதெல்லாம் பழுத்த பின் தான், பிஞ்சுகளாகவே மாறுகின்றன.

வகுப்பறையில் ஒரே டெஸ்கில் அமர்ந்திருப்பவருக்கும் ஐவரில், ஒரு மாணவி திசை மாறும் போது, அது தொற்று நோயாக, மற்ற நால்வருக்கும் பரவுகிறது.

பின் இப்படி இருந்தால் தான் "கெத்து" என்று மாறி விடுகிறது. சனி,ஞாயிறு ஆகிய நாள்களில், இளவரசனும்; இளவரசியும் "நகர் வலம்"
போக, பர்தா கொடுத்து உதவும் தோழிகளும் உண்டு.

நூறு ரூபாய் கொடுத்து, அப்பன் ஆத்தா வாங்கிக்கொடுக்கும் செயினை விட, சுடிதாரை விட, எவனொ ஒருவன் வாங்கிக்கொடுக்கும், ஐந்து ரூபாய் "பைவ் ஸ்டார்" உசத்தியாய் தெரிகிறது, அந்த சாக்லேட்டின் காகிதம் கூட பாதுகாக்கப்படுகிறது. மற்ற மாணவிகளிடம் காட்டி, பெருமையடிக்க காரணமாகிறது. அந்த பெருமைக்கு இன்னும் ஒருத்தி ஆசைப்படும் போது, அந்த தொற்றுநோய்க்கான பலி எண்ணிக்கை உயருகிறது.

முன்பெல்லாம் பெண்ணை பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருந்தனர், இப்போதோ வயிற்றில் எரிமலையைக் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

டகங்கள் இதற்கு காரணம் என்ற "வழக்கமான" காரணமும் உண்மைதான். முன்பெல்லாம் திரைப்படங்கள், கல்லூரிக்காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டன. பரிமாண வளர்ச்சியின் படி, இப்பொழுதோ "பள்ளியில் காதல்" என்பது தான் திரைப்பட களமாகி இருக்கிறது.

ந்த வலைப்பூவில் இப்படியொரு பதிவா என சவுக்கு வீச தயாராகும், கலாச்சாரக்காவலர்களே மன்னியுங்கள். நாங்கள் வரம்பு தாண்டி பதிவெழுதுகிறோம் என்று கண்டிக்க வேண்டாம். "குறைந்து விட்ட காதலிக்கும் வயது" என்பது தான் இந்த பதிவுக்கான எல்லை.

யினும் யாரேனும் உங்களிடம் கேட்கக்கூடும், ஒரு கேள்வியை..

நோட்டிற்குள் மயில் தோகையை வைத்து, குட்டி போடுமா என பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய வயதில்; அவர்களே "குட்டி" போடுகிறார்களே.. அதற்கு என்ன பதில் உங்களிடம் இருக்கிறது. (தமிழகத்தில் இது மூன்றாம் நிகழ்வு.)

Reference பதிவுகள்:

1.குறட்டை புலி - மாணவி பிரசவம்;யாருக்கும் வெட்கமில்லை!

2.எங்கே செல்லும் இந்த பாதை - நட்பு- பயோடேட்டா.

3.கோமாளி - செல்லத்திற்கு ஒரு கடிதம்.
(கடைசி சில பத்திகள்)


கடவுளுக்கு ஓர் கட்டளை.


ணிகம் செய்து
களைத்து
வகுப்பறையில்
ஓய்வெடுக்க வரும்
ஆசிரியர்களைக்
கண்டு
ஆத்திரம் கொண்டேன்...

"ன் வாத்தியார்
இப்படி
இருந்திருந்தால்
நீ எப்படி
இப்படி?"

"ந்நேரம்
உன் தோலை உரித்து
வாத்தியமாக
அல்லவா
அடித்துக்கொண்டிருப்பார்கள்"

வாமனா...
உன் மூன்றாவது அடியை
இந்த ஆ"சிறியர்களின்"
தலையில் வை...

சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் -5 
கவிதையின் பின்புலம் பற்றி ஆராயும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.



********************************************************************************

பொங்கல் பரிசாக பல்சுவை விருந்து,

இந்த வாரம்: ரசித்தவைகளும், யோசிக்கவைத்தவைகளும்.





இந்த வார செய்தி:

இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 3.20 வழக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. 9927 சி.பி.ஐ. வழக்குகள் நிலுவையில் உள்ளன. (தாமதமாகும் நீதி அநீதியாம்)

சீனாவில் குற்ற வழக்குகள் 3 மாதங்களிலும், சிவில் வழக்குகள் 6 மாதங்களிலும் முடிக்கப்படுகின்றன. வழக்கு பற்றிய அனைத்து வழக்குகளும் கணிணிமயமாக்கப்படுவதால் விரைவில் வழக்குகள் முடிக்கப்படுகின்றன.
கொசுறு:
சீனாவில் ஒருவர் நீதிபதியாக ஆக வேண்டுமென்றால் அவர் வழக்கறிஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை. தேசிய நீதித்துறை தேர்வில் வெற்றி பெற்று, உரிய பயிற்சிகளை முடித்தால் 23 வயதில் ஒருவர் நீதிபதியாகி விட முடியும்.

விடை தெரியா விஷயம்:
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடக்குமா இல்லை +2 மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கை நடைப்பெறுமா என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

இந்த வார தமிழன்:

துபையிலிருந்து ஒலிபரப்பாகும் மலையாள வானெலியான ஏஷியா நெட்டில் தினசரி ஒரு மணி நேர தமிழ் நிகழ்ச்சியில், கடந்த 4 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆங்கில சொற்களை மட்டுமே பயன்படுத்தியுள்ள ஆசிஃப் மீரான் அவர்களை  இந்த வார தமிழனாக அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
திரு. ஆசிஃப் மீரான் அவர்களின் வலைப்பூ சாத்தான் குளத்து வேதம்.

இந்த வார தகவல்:

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (TNPSC) நடத்தும்
VAO எனும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான தேதி பிப்ரவரி 20 என
http://www.tnpsctamil.in/2011/01/blog-post_08.html
அறிவிக்கப்பட்டுள்ளதால், தட்டச்சு தேர்வுகள் பிப்ரவரி 26, 27 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதர் ஒரு நூல்:
ஒரு மனிதர் நேரம் கிடைக்கும் போதெல்லாம், லண்டனிலுள்ள பிரிட்டிஷார் நூலகத்திற்கு சென்று பல்வேறு நூல்களைப் படித்தார். அவ்வாறு படித்து 28 நோட்டுப்புத்தகங்களில் குறிப்புகளை எழுதி வைத்தார். அந்த குறிப்புகளை வைத்து அவர் எழுதிய ஒரு புத்தகம், உலக மதங்களின் வேதப்புத்தகங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப்படிக்கப்படுகிறது.
அந்த புத்தகம்: கேபிடல். அந்த மனிதர்: காரல் மார்ஸ்.

இந்த வார வலையுலக அரட்டை:
ganesukumar@twitter.com
உடம்புக்கு எந்த நோவுன்னாலும் முதலில் நெத்தியில் விபூதி வைத்துவிடும் அப்பத்தாவிடம் நாத்திகம் பேச மனம் வருவதில்லை.
kolaaru@twitter.com
வலியில் "அம்மா" எனக் கதறும் நாம், வலி தீர்ந்ததும் "அப்பா" எனப் பெருமூச்சு விடுவதன் உளவியல் என்ன?

இந்த வார அரசியல்:
மன்மோகன் சிங்: ஹலோ, நீரா ராடியாவா?  மத்திய அமைச்சரவையில் ஏதோ மற்றம் அப்படினு சொன்னாங்க,  என்ன மாற்றம்-னு சொன்னீங்கனா நல்லாயிருக்குங்க..


தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்பதால், ராசா அப்பழுக்கற்றவராகி விட்டார், சி.பி.ஐ. விசாரணை புஸ்வாணமாகி விட்டது. - ஜெயலலிதா. (சீச்சீ.. இந்த பழம் புளிக்கும்...)


இந்த வார கவிதை:
"அம்மாவென அழைத்தது குழந்தை
அடுத்த நிமிடம் விழுந்தது அடி
கால் மீ மம்மி"
-வசீகரன் அவர்களின் குட்டியூண்டு ஹைக்கூ தொகுப்பிலிருந்து.

இந்த வார விருது :
பொங்கல் விடுமுறை நாட்களில், தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்காமல், உயிர் வாழ முடியாது என்ற நிலையிலுள்ள தமிழர்களுக்காகவே, வழக்கமான மின்தடையை செய்யாமல்,தை முதல் மூன்று நாட்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கிய தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இந்த வார பொங்கல் விருது வழங்கப்படுகிறது.

சென்னை சங்கமம் - ஒரு மாறுபட்ட அதிரடி விமர்சனம்.

விஜய் நடித்த காவலன் போன்று வெளிவருமா, வராதா என்ற சந்தேகங்களைத் தாண்டி, பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்துள்ளது சென்னை சங்கமம். தமிழ் மையம் மற்றும் முத்தமிழர் கலைக்கூடத்தின் கூட்டுத்தயாரிப்பில்  மிகுந்த பொருட்செலவில் உருவாக்கப்பட்டது இந்த படம்.

சி.பி.ஐ. ரெய்டு வரும் ஆரம்ப காட்சிலேயே ரசிகர்களை அதிர வைத்து, சீட்டின் நுனியில் உட்கார வைப்பது படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.

சென்ற வருடம் வெளியாகி சக்கைப்போடு போட்ட "ஸ்பெக்ட்ரம்" படத்தின் இரண்டாம் பாகமோ என ஆரம்பக்காட்சிகள் நினைக்க வைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் திரைக்கதையின் திசை மாறுவது ஆறுதல் அளிக்கிறது. தனது முந்தைய நான்கு படங்களில் கதாநாயகன் வேடத்தோடு, இயக்கும் பொறுப்பையும் ஏற்றிருந்த ஜிகத் பஸ்பர் இந்த படத்தில் இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தியிருப்பது கூடுதல் பலம்.

கிராமத்து கலைப்பண்பாடுகளை, பட்டணத்து மக்களுக்கு மறு அறிமுகம் செய்ய எண்ணுகிறாள் கதாநாயகி. கதாநாயகியின் லட்சியம் நிறைவேறியதா என்பதை சுவையான சம்பவங்களோடு காட்சியாக்கி இருக்கிறார் இயக்குநர்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள திரைக்கதைக்கு, தன்னுடைய அழுத்தமான நடிப்பால் மேலும் மெருகூட்டியுள்ளார் கதாநாயகி பனிமொழி. முந்தைய படங்களில் இவர் அலட்டலாக நடித்துள்ளார் என ஊடகங்கள் விமர்சித்ததால் இந்த முறை முகபாவங்களில் அதிக கவனம் செலுத்தியிருப்பது நன்றாகத் தெரிகிறது.

"திருவிழா, நம்ம தெரு விழா" என்ற பாடலில், கிராமத்து நாட்டமையாக வரும் இளைஞர், துள்ளாட்டம் போட்டியிருக்கும் காட்சிகளில் ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

பாட்டின் முடிவில், "இளைஞர் இங்க வந்து, வழக்கிருக்கிற வீட்டில் கை நனைப்பது ,பஞ்சாயித்து தீர்ப்புபடி தப்பு" என பழைய நாட்டமை பயலலிதா கனல் கக்குவது திரைக்கதையில் நல்ல திருப்பம்.

இறுதிக்காட்சிக்கு முன்பு வரும் "ஆட்சி, ஆட்சி" என்ற பாடல், ஆடுகளம் படத்தின்  "யாத்தே யாத்தே"  பாடலை நினைவுறுத்தினாலும், ரவை முத்து பாடல்வரிகளில் சிலிர்க்க வைக்கிறது. "ஞாயிறு போற்றுதும்,ஞாயிறு போற்றுதும்" பாடல் மெலடியாக மனசை வருடுகிறது.
  
வரமணியின் பிண்ணனி இசை தேவையான இடங்களில் மட்டுமே ஓங்கி
ஒலிப்பது நிறைவாக உள்ளது.

வசனம் ஜொலித்திருக்கும் இடங்கள்:


"தமிழ்ப்புத்தாண்டு நம்ம புத்தாண்டு.. அத நாம தானே கொண்டாடனும்.."

"ஐயாயிரம் கலைஞர்களுக்கு ஒரு மாச சாப்பாடு இது".
மற்றும்
இடையிடையே "மதுரைக்கார குரலில்" ஒலிக்கும் பின்புல எதிர்ப்பு வசனங்கள்.
பிளாஷ்பேக்கில் வரும் நாரா வாடியாவின் உரையாடல்கள்.

மொத்தத்தில் பொங்கல் ரேசில்,  கிராமத்து ஆடுகளத்தில், சிறுத்தையாய் சீறி, கலாச்சாரக் காவலனாய் மாறியிருக்கிறது இளைஞனின் தயாரிப்பில் வந்துள்ள சென்னை சங்கமம்.

ஏ   சென்டர்களில் 100.5 நாட்கள், பி   சென்டர்களில் 75.5 நாட்கள், சி சென்டர்களில்  55.5 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 57.5

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று.

கோமாதா.... எங்கள் குலமாதா...



காங்கேயம் (தமிழ்நாடு)

 அமிர்த மகால் (கர்நாடகா)

 பச்சூர் (பிகார்)

 பர்கூர் (தமிழ்நாடு)

 தாங்கி ((மகாராஷ்டிரா)

 தியோனி (மகாராஷ்டிரா)

 கவொலாவோ (மகா)

 கீர் (குஜராத்)

 ஹல்லிகர் (கர்நாடகா)

 ஹரியானா (ஹரியானா)

 காங்ரெஜ் (ராஜஸ்தான்)

 கேன்கதா (உத்திரப்பிரதேசம்)

 கேரிகார்க் (உத்திரப்பிரதேசம்)

 ஹில்லார் (மகாரஷ்டிரா)

 கிருஷ்ணா வாலி (கர்நாடகா)

 மால்வி (ராஜஸ்தான்)

 மேவாதி (உத்திரபிரதேசம்)

நகோரி (ராஜஸ்தான்)

நிமாரி (மகா)

ஓங்கோல் (ஆந்திரா)

 பொன்வார் (உத்திரபிரதேசம்)

 புங்கனூர் (ஆந்திரா & தமிழ்நாடு)

 ரதி (ராஜஸ்தான்)

 சிவப்பு காந்தாரி (மகா, குஜராத்)

 சிவப்பு சிந்தி (பஞ்சாப்)

 சாஹிவால் (பஞ்சாப்)

 சிறி (மேற்குவங்கம் & சிக்கிம்)

 தார்பார்க்கர் (ராஜஸ்தான்)

 உம்பளச்சேரி (தமிழ்நாடு)

 வச்சூர் (கேரளா)

 கங்காத்திரி ( உ.பி & பீகார்)

 மல்நாட் ஹிடா (கர்நாடகா)

 தோ தோ (நாகாலாந்த்)

பட்டியலில் உள்ள அனைத்து வகை மாட்டு இனங்களுக்கும்  இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


(விடுபட்ட இனங்களுக்கும் சேர்த்துத்தான் வாழ்த்துக்கள். பட்டியலில் பேர் வரலியேனு சாணியடிச்சுடாதீங்க... கோமாதாக்களே....)

***********************************************************************************

படங்கள் மற்றும் தகவல்கள்: 
அருள்மிகு கூகுள் நாச்சியார் உடனுறை கூகுள் ஆண்டவர்.

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்