அறை எண் 15 - சில டைரி குறிப்புக்கள்.

முஸ்கி: 
என் டைரி -2010 என்ற தலைப்பிலான தொடர் பதிவில் ,
ஆமினா அவர்களின் அழைப்பை ஏற்று, தொடர்கிறோம்.

எங்கள் டைரி ரெய்டு வந்த சி.பி.ஐ. வசம் இருப்பதால், வித்தியாசமான முயற்சியாக, அறை எண் பதினைந்தின் டைரியை உங்களுக்கு திருட்டுத்தனமாக சமர்பிக்கிறோம்.
 (அடுத்தவங்க டைரியை படிக்குற சொகம்... அட அட....)




நான் இந்தப் பள்ளியின் பதினைந்தாம் எண் அறை. நான் இங்குள்ள சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம்.

அவர்களின் அடையாளம் என்பது பன்னிரெண்டாம் வகுப்பு அ1,அ,ஆ மாணவியர்கள்.
பாவம் அவர்கள் அனைவரும் வரும் மார்ச் 2011 பொதுத்தேர்வுக்காக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இருக்கிறார்கள். சூறாவளியாக சுழன்றாடுகிறார்கள்.

 மார்ச் மாதம் வரை அவர்களின் தேதிகள் முழுமையும் நிரப்பப்பட்டு இருக்கிறது. அனைத்து ஆசிரியர்களும் தங்கள் பிடியை இறுக்கத்துவக்கிவிட்டனர். அம்மாடி ஒரு கழுத்தில் எத்தனை சுருக்குக்கயிறுகள்.

சென்ற வருடமும் இப்படித்தான் இருந்தது. இதே சூழல் ஆனால் வேறு மாணவியர்கள்.

2010-  ல் இதே ஜனவரி மாதம் அவர்களும் அலை பாய்ந்துக் கொண்டிருந்தனர், போகி அன்று கூட வந்திருந்தனர், செய்முறை வகுப்பு என்று கூட்டமாய் கருவிகள் நோண்டினார்கள். மெல்லியதாய் சிரித்துக்கொண்டனர்.

வகுப்பு முடிந்த பின்னும் கலையாமல் படிக்கட்டுக்களில் தவமிருந்தனர். ஆசிரியர் இல்லாத பொழுதுகளில் சத்தமாய் சிரிந்தனர், என்னுடைய சுவர்களில் கூட பெயர் செதுக்கினார்கள். மார்ச்சில் தேர்வெழுதி, மே மாதம் தேர்ச்சி தகவல் பெற்றனர், ஜூனில் கல்லூரியில் கலந்தார்கள்.

சென்ற வாரம் கூட கல்லூரி விடுமுறை நாளில் இங்கே வந்திருந்திருந்தனர், என்னுள் உலவினர். தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளில் மீண்டும் ஒரு முறை அமர்ந்து மகிழ்ந்தனர்.

சென்ற  வருட மாணவியரும், இந்த வருட மாணவியரும் கலந்திருந்த அந்த நாள் என் டைரிக்குறிப்பில் சிறந்த நாள்.

இந்த வருட மாணவியருக்கும், அடுத்த வருடம் இங்கே வந்துப் பார்க்கும் ஆசை முளைக்கும். நிறைய சந்தோஷ நிகழ்வுக்களும் நிகழ்ந்திருக்கிறது.


 சுதந்திர தின விழாவில் இந்தியாவின் வரைப்படம் வரைந்து, விளக்குகளால் ஒளியேற்றியது, ஆசிரியர்கள் தின விழாவில் ஆசிரியர்கள் போல பேசி நடித்துக்காட்டியது, அவர்களிடம் பேட்டி எடுத்தது, ரம்ஜான் கஞ்சியை அனைவருடன் பகிர்ந்துக்கொண்டது, பிறந்த நாளுக்கு அளிக்கப்படும் சாக்லேட்டுக்களை பதுக்கிக்கொண்டது, வீட்டுத்தோட்டத்தில் பூத்த பூக்களைக் கொண்டு வகுப்பறையை அலங்காரம் செய்தது, ஒரு மழை நாளில் குளிரெடுத்து நடுங்கிய மாணவிக்கு, ஆய்வக இன்டக்சன் அடுப்பு மூலம் சுடுதண்ணி தயாரித்தது என எல்லா வகுப்பறை கொடுக்கும் சுகங்களையும் இவர்களுக்கும் நான் தந்திருக்கிறேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு என்னும் பெயரில் இவர்களை பத்து மாதங்கள் சுமந்திருக்கிறேன், என் குழந்தைகளை வெகு விரைவில் உலகத்தினை பார்க்க இருக்கிறார்கள். வகுப்பறை என்பதும் கருவறைதானே.

பிரார்த்தனை செய்யுங்கள், என் குழந்தைகளின் தேர்வும், வாழ்வும் சிறக்க....

*********************************************************************************

தொடர்புடைய பதிவுகள்:





இந்த தொடர்பதிவை தொடர மாணவன்,  குறட்டை புலி,   அஞ்சா சிங்கம்லட்சுமி,  இரவு வானம் ,  சுந்தரா  ஆகிய பதிவர்களை அழைக்கிறோம். 
(அப்பாடா இனி நிம்மதியா தூங்கலாம்)

பிரபல பதிவர் பற்றிய சுவையான பயோடேட்டா


பெயர்:  ரஹீம் கஸாலி. (இதனை பற்றி தன்னிலை விளக்க பதிவு வேறு)

பட்டப்பெயர்:  கலா நிதி மாறன். (பதிவுலக மார்கெட்டிங் மன்னன்)

தொழில் :  
விருதுகளை வழங்குவதும், போட்டிகளை நடத்துவதும்.

உபத்தொழில்: 
தமிழ்மணத்தில் முதல் இருபது இடம் பெற்றவர்களுக்கு,
அவர்களுக்கு விஷயம் தெரியும் முன்னர் வாழ்த்துத்தெரிவிப்பது.

சொத்து:  ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்த போட்டோ.

பலம்:  ஞாயிற்றுக்கிழமைகளில் பதிவிட மற்றவர்கள் தயங்கும் போது, தைரியமா களமிறங்கி, தன் மார்கெட்டிங் திறமையால் ஹிட்டடிப்பது.

பலவீனம்:  ஓட்டு சேகரிக்க வைத்திருக்கும் வார்த்தைகள்.

சமீபத்திய சாதனை :  தமிழ்மணத்தில் தாக்குபிடிப்பது.

நீண்ட கால சாதனை :  பதிவுகளின் தலைப்புக்களில் பிரபலங்களின் பெயர்களை இழுத்து விடுவது.(சினிமா & அரசியல்).

பொழுது போக்கு :  வலைப்பூ முழுவதும் எழுத்துக்களை ஓட விடுவது.

பிரபல பதிவு:  அதென்ன மிசா அல்லது எமர்ஜென்சி. (என்ன கொடும சார்...)

அடுத்த பதிவு:  இதென்ன தடா, அதென்ன பொடா.


இதையும் படிங்க..

வடை போச்சே ஸாரி சாக்லேட் போச்சே...




வடை போச்சே ஸாரி சாக்லேட் போச்சே...



"முன்பெல்லாம் பரீட்சை ரிசல்ட் வரும்போது எங்களைத்தேடி நிறைய மாணவிகள் வருவாங்க, தேர்ச்சி பெற்றதுக்கு எங்களுக்கு நிறையா சாக்லேட் தருவாங்க, அவ்வளவு சாக்லேட்டா வச்சுட்டு என்ன பண்ணறதுன்னு பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு அள்ளிக்
கொடுப்போம்.

ஆனால் இப்ப ரிசல்ட் அன்னிக்கு ஸ்கூல் பக்கம் வருபவர்கள் ரொம்ப கம்மி, இப்பெல்லாம் நாலஞ்சு சாக்லேட் கிடைக்குறதே பெரிய விஷயமாயிடுச்சு, இந்த அளவு பிஞ்சுகள் மனசுல விஷத்த விதைச்சது யாரு"

சமீபத்தில் சந்தித்த முன்பு படித்த பள்ளியின் மூத்த ஆசிரியர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் இது.

 என்னடா " வடை போச்சே" ஸ்டைலில் பேசுறாரே அப்படினு நினைச்சேன்.

அப்புறம் ஒரு விஷயம் சொன்னாரு இத சாக்லேட் சம்பந்தப்பட்ட விஷயமா பாக்கல, ஜெயித்த பிறகு ஆசிரியரை மரியாதை செய்யும் ஒரு சின்ன நடைமுறை. ஒரு நன்றியறிவிப்பு. ரிசல்ட் வரும் போது உண்டான மகிழ்ச்சியை அதற்குறிய மனிதர்களுடன் கொண்டாடுதல்."

அவர் பாலகுமாரன் ஸ்டைலில் பேச பேச எனக்குள் ஏராளமான கேள்விகள் உதித்தன. அயற்சியாய் வானம் பார்த்தேன்.
 
இந்த நிகழ்வை ஆசிரியர்களுக்கான மரியாதை குறைந்துவிட்டதை குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாமா?

எதற்கெடுத்தாலும் மாணவர்களை குற்றம் சொல்லுதல் போல இதற்கும் மாணவர்கள் தான் காரணமா?

மாணவர்களிடம் மூத்தவர்களை மதிக்கும் பண்பு குறைந்துவிட்டதா?

மாணவர்கள் டியூசன் போன்ற வெளியிடங்களில் அதிக அளவு விஷயங்கள் கிடைப்பதால் பள்ளி ஆசிரியர்கள் மீதான மரியாதை குறைந்து விட்டதா?

ஆசிரியர்களுக்கான அவமரியாதை, நன்றி மறந்து விடுதல் என்பது நாளை பெற்றோர்களுக்கும் நிகழ்ந்து விடுமா?

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என்ற உறவு முக்கோணத்தில், சமநிலை பிறழ்ந்ததற்கு யார் பொறுப்பு?

ரிசல்ட் பார்க்க முன்பெல்லாம் பள்ளிக்கு மட்டுமே வரவேண்டும் என்ற நிலை தற்போது மாறி, குறுஞ்செய்திகள் மூலமாகவே தேர்வு முடிவுகள் கிடைத்து விடுவதால், ஆசிரியர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆகவே இது சின்ன விஷயமே. ஆசிரியர்-மாணவர் உறவு என்பதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று எளிதாக எடுத்துக்கொள்ளலாமா?

அல்லது இப்படி யோசித்த விதம் தவறா?தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம், யோசிக்கும் விதத்திலும், நடந்துக்கொள்ளும் விதத்திலும்.


இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் 3 .

மன்(மோகன்) அம்பு - இது அரசியல் வம்பு.

கடந்த 2010 ஆண்டினை கலங்கடித்த, பிரபலங்கள் பற்றிய கேள்விகள்
இவை, சிலவற்றிற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை, மக்களின் மறதிக்காக காத்திருக்கிறார்களோ என்னவோ?


மன்மோகன் சிங்
விலைவாசியை குறைக்கச்சொல்லி,உங்க அமைச்சரவையில் உள்ள சரத்பவாருக்கு ஒரு கடிதம் எழுதுனீங்களே....நல்ல ஐடியாங்க. ஆனா காரியம் ஒண்ணும் நடந்த மாதிரி தெரியலையே?
- உங்களுக்கு கீழ் இருக்கிற அமைச்சருக்கே, கடிதம் எழுதிதான் விலைவாசி நிலவரத்த சொல்ல வேண்டியதா இருக்கே. பாவங்க நீங்க. அதெல்லாம் இருக்கட்டும் அந்த லட்டர்ல மானே, தேனே அப்படினு போட்டிங்களா?
 
:

இது பூக்கள் பூக்கும் தருணம்...

மழலையைப் போலவே, மழலையைப் பற்றி பேசும் வார்த்தைகளும் கூட மிக ரசனைக்குரியவைகளாக மாறிவிடுகிறது. அதிலும் கவிதை வரிகளாக மாறும் வார்த்தைகளில் சுகம் இன்னமும் அதிகம்.



 வாராய் என் பிள்ளை கனியமுதே...

இந்த ஜென்மம் முழுவதும்
உன்னை நான்
ரசித்திட வேண்டும்.
தாமரை இதழ்களை
கோர்த்து செய்த
விரல் பிடித்து
இந்த பிறவி முழுவதும்
நான் நடந்திட வேண்டும்.

உன் மழலை மொழியில்
கொஞ்சம்
சிதைந்து வரும்
என் பெயரின்
எதிரொலியை
வாழ்நாள் முழுவதும்
நான் கேட்டிட வேண்டும்.

 உன் பிஞ்சு சிறுவிரல்கள்
அடித்து என் கன்னங்கள்
சிவந்திட வேண்டும்.

 உன் சின்னஞ்சிறு சிரிப்பில்
என் துன்பங்கள்
நிறம் மாறிட வேண்டும்.

உன்னுடைய இளைய முகம்
பார்த்துதான் என் தினசரிகள்
விடிந்திட வேண்டும்.

எந்தன்
தாலாட்டுப்பாடலில்
நீ கண்ணுறங்கிட வேண்டும்.
உறக்கம் வராத பொழுதுகளில்
உன் நெற்றியை
மயிலிறகால்
வருடிட வேண்டும்.


உன் முகம்
பார்த்துக்கொண்டிருக்கும்
ஏதேனும் ஒரு பொழுதில்
நான் மரித்திட வேண்டும்.



இது போல
யாருக்கும்
ஜென்மம் முடிந்ததில்லையென
கவிதையாய்
என் வாழ்வு
முடிந்திட வேண்டும்.

- பாரதி.

2011-இது மகிழ்ச்சி பூக்கள் பூக்கும் தருணம்...




பிரபலங்களுக்கு புத்தாண்டு பலன் சொல்லியிருக்கும் குறட்டை புலியின் அட்டகாசங்களையும் பாருங்களேன். 
http://sleepingtiger007.blogspot.com

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்