பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ் மட்டம் வீக்.


வாசிக்கவும், எழுதவும் தெரியாத மாணவர்கள், பத்தாம் வகுப்பில் கூட உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் வேண்டுமானாலும் உங்களின் அக்கம்பக்கம் உள்ள அரசு பள்ளிகளில் விசாரித்துப்பாருங்களேன்.

இடை நிற்றலை தவிர்க்கும் விதத்தில் எட்டாம் வகுப்பு வரை கட்டாய
ஆல்-பாஸ் முறையை அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் அதன் பின் விளைவுகள் இப்படி இருப்பது இன்னும் உலகத்தாரின் கண்களுக்கு தென்பட வில்லை என்பது உண்மை.

அனைவரும் தேர்ச்சி என்பதால் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்பது ஒரு புறம் சரியான விஷயமாக இருந்தபோதிலும், கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியே.

எப்படி படித்தாலும் பாஸ் தானே என்பதால் மாணவர்கள், படிப்பில்
முழு கவனம் செலுத்துவதில்லை.

ஏற்கனவே மாணவர்களை கண்டிக்கக்கூடாது என்று இருப்பதாலும், பொதுத்தேர்வு, அதன் தேர்வு முடிவுகள் என்ற நெருக்குதல்கள் இல்லாதாலும் சில ஆசிரியர்கள் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று பெற்றோர்களும் கவனியாமல் இருக்கிறார்கள்.எப்படியும் பாஸ் என்பதால் தன் குழந்தைகள் விடுப்பு எடுப்பதையும் அலட்சியமும் செய்கிறார்கள்.

வெறுமனே பாஸ் பாஸ் என்று, வருடங்களை மட்டும் கடந்து, பத்தாம் வகுப்பு வந்து ஒண்ணும் தெரியாமல் வந்து நிற்கும் மாணவர்களுக்கு நாங்கள் பாடம் நடத்துவதா, வாசிக்க பழக்குவதா என பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள்,பழியை எட்டாம் வகுப்பு ஆசிரியர்கள்  மீது  தள்ளி விடுகிறார்கள். அவர்கள் சின்ன வகுப்பு ஆசிரியர்களை சரியில்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.

முன்பெல்லாம் பள்ளிக்கு போக முடியாதவர்கள் மட்டும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தனர், இப்போது பள்ளி போகிறவர்கள் கூட கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இது தான் வளர்ச்சியா?

இப்போதைய கல்வியின் நிலவரம் "பில்டிங் ஸ்ட்ராங், ஆனா பேஸ் மட்டம் வீக்" என்பது தான்.

இந்த பிரச்சனையை சரி செய்யாவிடில், உலகிலேயே இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற புள்ளிவிபரம் மட்டுமே மீதமிருக்கும், நிதர்சனத்தில் அவர்கள் அனைவரும் எண், எழுத்து என்னும் இரண்டு கண்களும் இல்லாத புதியவகை மாற்றுத்திறனாளிகளாகவே இருப்பார்கள்.

அப்புறம் எங்க போயி வல்லரசாவது?

***********************************************************************************

இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் 4.


***********************************************************************************

சம காலக்கல்வி பற்றிய முந்தைய பதிவுகள்:


வடை ஸாரி, சாக்லேட் போச்சே. 


ஐயோ.. யாராவது தெளிய வைய்யுங்களேன்.


இப்படித்தான் இருக்க வேணும்...



குறட்டை புலியின் சவாலுக்கு, ஒரு பெண் சிங்கத்தின் பதில்..

மிக நேசித்த ஒருவர், ஒரு கட்டத்தில் "யார் நீ" கேட்க நேரிடும் சூழலை தந்து, கவிதை எழுத பதிவர்களுக்கு சவால் விடுத்த "குறட்டை புலி" அவர்களின் கவிதை போட்டிக்கான கவிதை இது.
      

இருந்தவள் பேசுகிறேன்...

யார் நீ
என்ற
உன் கொடூர கேள்விக்கு
என்ன பதில் சொல்வேன்?

உன் உறவு என
சொல்லிக்கொள்ளவும்
இயலாது.
உன் மனப்புத்தகத்தில்
என்னைப்பற்றிய
அத்துணை  வரிகளையும்
அழித்து விட்டாய்.

வேறு யாரையும்
வைத்தும் என்னை
அடையாளம்
காட்ட முடியாது.
ஏனெனில்
யாரோடும்
நானில்லை.
என்னோடும்
யாருமில்லை.

இருப்பென்று
ஏதுமில்லை
இருந்த இதயத்தை
உனக்கென்று
தந்து விட்டாயிற்று.

முள்ளில் விழுந்த
சேலையைப்போல
என்னிலிருந்து
உன்னை கவனமாய்
பிரித்து போன பின்
எனக்கென்று
தனி அடையாளம்
ஏதுமில்லை.

நிலைமை
இப்படி இருக்க
"யார் நீ"
என்ற
உன் கொடூர கேள்விக்கு
என்ன பதில் சொல்வேன்?

வேண்டுமெனில்
இவ்வாறு சொல்லலாம்..
"உன்னால்
இறந்து போனவள்"

-பாரதி.


டிஸ்கி: கவிதை எழுதும் கவிதைக்கு அழைத்த குறட்டை புலிக்கு நன்றி. வேறு யாராவது இதே சூழல் கொண்டு கவிதை எழுதினால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். ரசிக்க வருகிறோம்.

பஸ்கி: எங்கள் வலைப்பூவில் வெளியாகும் முதல் காதல் கவிதை இது.


படம்:
http://marabinmaindanmuthiah.blogspot.com/2010_04_01_archive.html

வீரத் துறவியும், தெருவோர இளைஞனும்...

கால்பந்து ஆட்டக்களத்தில் 
உடலுக்கு உரம்
சேர்க்கச் சொன்னது 
உனது உரைகள்...

தொலைக்காட்சித் தவத்தால்
வயிறுப் பெருத்து, 
வாழ்க்கைச் சிறுத்து, 
மானாட, மயிலாட களத்திற்கு 
உரம் சேர்ப்பது 
எங்களின் "கெமிஸ்ட்ரி"

"தேசம், மக்கள் 
இவையே நம் தெய்வங்கள்; 
மற்றெல்லா தெய்வங்களும் 
மனதை விட்டு அகலட்டும்" 
இவை உன் வார்த்தைகள்.

அரிதாரம் பூசுபவர்களையும் 
அவதாரங்களில் சேர்த்து 
தெய்வங்களின் பட்டியலை
நீட்டித்துக்கொண்டது
எங்களின் நிகழ்காலம்...

உன்னுடைய 
"சித்தாந்த முகவரி"யிலிருந்து 
அரசியல் முடிவுகள் 
வந்தது அந்தகாலம்....

"பவர் புரோக்கர்"
பெண்மணியின் 
நுனி நாக்கு ஆங்கிலத்திலிருந்து 
முடிவுகள் 
வருவிக்கப்படுவது 
எங்கள் காலம்.

எழுமின், விழிமின் என 
கொதித்த சில உத்தமர்களுக்கு 
ரத்தக்கொதிப்பு வந்தது மட்டும் 
மீதம்.


குருஷேத்திரத்தில் 
இது  மாயக்கண்ணன்களின் காலம்;
நாங்கள் வீர அபிமன்யுவாக
மாற்றப்பட்டு,
மரிக்க வேண்டியிருக்கிறது.

தலைவர்களால்
முதுகெலும்பு உருவப்படாமல் 
மிச்சமிருக்கும் 
நூறு பேர் 
இப்போது தயார்..

அடுத்த போர் என்பது 
அது எந்த தலைவரின் கீழும் அல்ல;

எங்கள் போரே 
தலைவர்களை 
எதிர்த்து தான்...


***********************************************************************************
தொடர்புடைய மற்ற பதிவர்களின் படைப்புக்கள்:



இங்கிலீஷ் மீடிய தமிழன் - விகடனில் சில விவகாரங்கள்.

ஆனந்த விகடன் வாசித்தல் என்றாலே ஆனந்தம் தான், இந்த வார விகடனில் (அட்டையில் யுவன் ஷங்கர்) நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன்,
அறிவு மதி, தங்கர் பச்சான், பாரதி ராஜா, வைரமுத்து, வாலி, கமலஹாசன், யுக பாரதி என பிடித்த பிரபலங்கள் அணி வகுத்ததால் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாகி விட்டது, ரொம்ப நாளாகி விட்டது, இப்படி தளும்ப தளும்ப விகடன் வாசித்து.


பொங்கல் கொண்டாடும் சூழலில் இன்றைய தமிழனின் மன, மான நிலை பற்றி ஏதேனும் பதிவு, நீங்கள்  எழுதுவதாக இருந்தால்,விகடனில் உள்ள  தங்கர்பச்சானின் கட்டுரையை படிக்காதீர்கள். படித்தீர்கள் எனில் அதன் தாக்கம் கண்டிப்பாக உங்கள் பதிவில் தெரியும். கிட்டத்தட்ட எல்லாம் விஷயங்களையும் நோக்கி சவுக்கு வீசியிருந்தார் தங்கர்.

ஆனால் ரசித்த பிரபலங்களின் வார்த்தைகளை அலசி ஆராய குழப்பம் தான் மிச்சம் இருந்தது.

 
குழப்பம் 1 : 
இணையத்தில் எழுதும் எழுதும் எழுத்தாளர்களிடம் வாசிப்பு பழக்கம் மிகமிகக் குறைவு, இணையத்தில் வம்பு வழக்குகளும், கிசுகிசுக்களும் அதிகமாகிவிட்டன என்று சாட்டை வீசும் அதே நாஞ்சில் நாடன், அடுத்து இலக்கியவாதிகள், தமிழ் எழுத்தாளர்கள் குடித்து விட்டு சச்சரவுகள், சர்ச்சைகளை உண்டாக்குவதை இயல்பு என்று நியாயப்படுத்துகிறார்.

குழப்பம் 2:
நான் பாட்டெழுத அரை மணி நேரமே எடுத்துக்கொள்வேன், அதுவும் தயாரிப்பாளர் தந்த செக் செல்லுமா என சரி பார்ப்பதற்கு என்று தன்னைத்தானே வாரிக்கொண்ட வாலி, இயக்குனர் ஷங்கர் தனக்கு அர்த்தமில்லாத பாடல்கள் மட்டுமே எழுத வாய்ப்பு தந்ததாக சலித்துக்கொள்கிறார். செக் செல்லுமா அப்படினு செக் பண்றவருக்கு எந்த பாட்டு எழுதினா என்னா-னு மத்தவங்க நினைக்க மாட்டாங்களா?  

குழப்பம் 3:
இன்றைய மாணவர்கள் டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானி, போலீஸ் அதிகாரி ஆவற்கு தான் விரும்புகிறார்கள், யாராவது விவசாயம் பார்க்கப்போகிறேன் என்று சொல்வதுண்டா என வினவும் அதே தங்கர்பச்சான்;  "நான் என் பிள்ளைகளை ஊருக்கு போய்  நிலங்களைக் கவனித்து, நல்லபடியாக இருங்கள் என சொல்லத் தயாராக இல்லை" என்றும் சொல்லும் போது; மெய்யாலுமே கண்ணைக் கட்டுகிறது.

குழப்பம் 4:
இது தான் உச்சக்கட்ட,மண்டையிடி குழப்பம்.

"இங்கே எங்கேய்யா இருக்கான் தமிழன்? தேர் இஸ் நோ தமிழன் இன் தமிழ் நாட்". 
"தமிழ் நாட்டில் மட்டும் தான் 50 பெர்சன்ட் தமிழன், 50 பெர்சன்ட் அதர் பீப்பிள் இருக்கான்"    
அரசியல் எனக்கு சரி வராது. இன்னிக்கும், ஐ லவ் மை பீப்பிள். ஐ லவ் மை சாயில். ஐ லவ் மை லாங்குவேஜ்"

இப்படி தன்னுடைய லாங்குவேஜை லவ்வோ லவ்வுனு லவ்வும் பாரதி ராஜா அவர்களின் வார்த்தைகள் தான் அந்த உச்ச கட்ட மண்டையிடி முரண்பாடு.

போன வார சீனா அய்யா எங்க வலைப்பூவில பின்னூட்டம் போட வந்ததற்கே இந்த வாரம் வரைக்கும் எங்களுக்கு உடம்பு நடுங்குது, ஆனா இங்கிலீஷ் மீடிய தமிழனாக மாறிவிட்ட பாரதி ராசாவின் பேச்ச கேட்கும் போது தான், நாங்க எவ்வளவோ பரவாயில்லை அப்படினு மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.

***********************************************************************************
அதெல்லாம் சரி உங்களுக்கு விகடன் பிடிக்குமா? விகடன் வாங்கியவுடன் முதலில் எதை படிப்பீர்கள்?

***********************************************************************************

வீர வணக்கங்கள்.

ரஜினி...ரஜினி...ரஜினி...


இன்று அமெரிக்காவில் அதிக பனியின் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திரும்பின. # இந்தியாவில் ரஜினி புகைப்பிடித்தார். # தம்பியின் ராஜதந்திரம் இது- கலைஞர் வரவேற்பு.
***********************************************************************************


சச்சின்: எங் கூட விளையாடறவங்க எல்லாம், நான் விளையாட ஆரம்பிச்சப்ப, ஸ்கூல்-ல படிச்சிட்டு இருந்தாங்க, தெரியுமா?
ரஜினி: கண்ணா, நம்ம கூட ஜோடியா நடிக்கிற பொண்ணுக எல்லாம், நாம நடிக்க ஆரம்பிச்சப்ப பொறக்கவே இல்லை... ஹா..ஹாஅ..ஹாஅ..
***********************************************************************************

தமிழ்நாட்ல ரஜினியும் நம்ம முதல்வர் மாதிரி தான், இப்பவெல்லாம் கலைஞர் கூட  கலந்துக்காத விழாவில கூட கலந்துக்கிட்டு, முன் வரிசையில, ஆறு மணி நேரம் உட்கார்ந்து, தன்னை புகழ்றவங்களோட வார்த்தைகளை புன்சிரிப்போட ஏத்துக்கிறாரே.
லைவ் நிகழ்ச்சியில் கொட்டாவி  வரும் போது என்ன பண்ணுறது # ட்வுட்.
***********************************************************************************

ஒரு முறை ரஜினி, சூரியனை மிக கோபத்துடன் பார்த்தார். சூரியன் நிலாவின் பின் சென்று ஒளிந்துக்கொண்டான். அதுவே மிக நீண்ட சூரிய கிரகணம். # அறிவியல் அதிசயம்.


kolaaru@twitter.com ரஜினி இளமையா இருக்கார் - எல்லாப் பயலும் இந்தப் பொய்யைச் சொல்றாங்க # கூடவே சுத்துறியே செவ்வாழ (கமல்) நீயாவது சொல்லக் கூடாதா?
***********************************************************************************

முன்னம் ஒரு காலத்தில் ரஜினி பல் விளக்குவதற்க்காக பல்பொடியை பயன்படுத்திக்கொண்டிருந்தார். அந்தப்பொடி தான், இப்போது பாரதி சிமெண்ட்.
***********************************************************************************

arasu1691@twitter.com
யப்பா "தலைவருக்கு"க்கு இன்னொரு ஹீரோயின் ரெடியாகிடுச்சு # மீனாவுக்கு பெண் குழந்தை! # ரஜினி ராக்ஸ்!
***********************************************************************************


15-01-11 அன்று ஜெமினி டி.வி.யில் தி ரோபோ (தெலுங்கு எந்திரன்) ஒளிப்பரப்பாகிறது  -இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக.

இந்தன வருஷம், எல்லா விஷயங்களிலும் என்னைச் சரியா வழி நடத்தியவன், அரசியலிலும் நாம என்ன செய்யணும்கிறதை நிச்சயம் அடையாளம் காட்டுவான் # ரஜினி சொன்னதாக விகடனில்.
***********************************************************************************

இனி சுனாமி வருவதற்கு வாய்ப்பில்லை # ரஜினி இந்தியப் பெருங்கடலில் துணி துவைப்பதை நிறுத்தினார்.
***********************************************************************************

ஒற்றைக்கையால் 100 கார்களை நிறுத்த யாரால் முடியும் - டிராபிக் கான்ஸ்டபிள் # எல்லாமே ரஜினி பண்ணுவார்னு எதிர்பார்க்கக்கூடாது. # பல்ப்.
***********************************************************************************

இது SMS திருவிழா - கலாய்ப்பு சிறப்பிதழ் - 5
***********************************************************************************************

தொடர்புடைய முந்தைய பதிவுகள்.

கலாய்ப்பு திருவிழா 4 - டெரர் SMS கள். 


கலாய்ப்பு திருவிழா 3 - கலக்கல் SMS கள். 


கலாய்ப்பு திருவிழா 2 - SMS இல் கடுப்பேத்துறாங்க எசமான்.


கலாய்ப்பு திருவிழா 1 -SMS இல் கடுப்பேத்துறாங்க யுவர் ஆனர்.

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்