இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி:

கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்‌டரில் கொலை.
                             
                                                
கோவை பெற்றோர்கள் பேட்டி:

இரத்த சரித்திரம்..

அதிகாலை பனியில்
மூச்சிரைக்க
சைக்கிள் மிதித்து
பேப்பர் போடும் பையன்;


கையில் உள்ள
சில்லறைகளை
இறுக்கப் பிடித்தப்படியே
நகர பேருந்தை
தேர்ந்தெடுத்து
ஏறும் சிறுவன்;

பாக்கெட்டில் உள்ள
காசினை
எண்ணி தந்துவிட்டு
பின் "ஒரு டீ"எனஆர்டர் கொடுக்கும்
கல்லூரி மாணவன்;




நூலகத்தில்
தேநீர் கொண்டு
பசியடக்கி
போட்டித்தேர்வுக்கான
புத்தகங்களில்

தவமிருக்கும் இளைஞன்;

இப்படியாய்
யாரேனும் ஒருவரை
யாங்கேணும்
காண நேர்கையில்


தவிர்க்க இயலாது
நினைவுக்கு வருகிறது
என் இளமைக்காலம்...




- எஸ்.பாரத்.
உலகில் வேறு எந்த பல்கலைக்கழகமும் கற்றுக் கொடுக்காத; வாழ்க்கைப் பாடங்களைத் தெளிவாகக் கற்றுக் கொடுக்கும் "வறுமை" எனும் பல்கலைக் கழகத்தில் பயின்றவன்.

காற்றும் கறுப்பும்... ஒபாமா பற்றி கவிஞர் வாலி.

விகடனில் ரசித்தவை

பரம்பரை கவிதை...

அப்பாவோட தாத்தா பேரு
தாத்தா கூட
பொறந்தவங்க பேருன்னு
மொத்தப் பரம்பரையும்

அத்துப்படியாச்சு
அப்பா மேல

சித்தப்பா போட்ட
சொத்து வழக்கை
படிச்சு படிச்சு

-க.ஆனந்த்
---------------------------------------------------------------------------------

எத்தனை அசிங்கங்களைத்தான் கண்டும் காணாமல் செல்வது?

சைல்ட் ஹெல்ப் லைன் 1098 என்பது என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும் , வீட்டிலோ, வெளியிலோ தங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் போது, குழந்தைகள் இந்த எண்ணுக்கு அழைத்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கூறலாம் என்பதே இந்த எண் உருவாக்கப்பட்டதன் நோக்கம்.




ஆனால் இந்த சைல்ட் ஹெல்ப் லைனுக்கு வரக்கூடிய அழைப்புகளில் நான்கில் ஒரு பங்கு அழைப்புக்கள் மௌனமாகவே இருக்கிறதாம். இந்த மௌனம் பற்றி கண்டிப்பாக நாம் பேசியே ஆக வேண்டும்

குழந்தைக்களுக்கு எதிரான கொடுமைகள் சமீபத்தில் பெருகி விட்டன என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் இவ்வாறு நிகழும் பெரும்பாலான கொடுமைகள், அவர்களின் குடும்பத்தாராலோ அல்லது குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றவர்களாலோ நிகழ்த்தப்படுவதாக முன்பு ஒரு முறை இந்தியா டுடே இதழில்,படித்தப்போது, நம்பமுடியாத செய்தியாக இருந்தது.



பதவி...பதவி..பதவி...

இந்த வார செய்தி:
மஹாராஷ்டிரா முதல்வர் அசோக் சவாணை பதவியிலிருந்து நீக்க பா... செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை..


கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் அரசியல் சட்டத்திற்கு மதிப்பு அளிப்பவராக இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.- வெங்கய்ய நாயுடு.

கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெற்றுத் தர முடியாவிட்டால் முதல்வர் பதவியை கருணாநிதி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அ.தி.மு.. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழகத்தில் கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் தி.மு.. வினருக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார் - தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின்.
(சென்ற வாரம் ராஜினாமா கோரும் வாரம்?)


ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்