நான் இறந்து போயிருந்தேன்...


நான் இறந்து போயிருந்தேன்...

ஐம்பது வருடம் வெண்ணையாய்
தின்று பாதுகாத்த உடம்பு
அசைவற்று கிடக்கிறது.
நான் என்பது தொலைந்து
"அது" என அடையாளம்
மாறிவிட்டிருந்தது..

மெல்ல தகவல்
பரப்பப் பட்டது.
தங்கள் பயணத்திட்டங்களை
மாற்றி என் இறுதிப் பயணத்திற்காக
குவிந்தனர்.

காற்றில் அசைந்த
சாமியானாவில் காத்திருந்த
மனிதர்களுக்கு
"வரக்காப்பி"
வழங்கப்பட்டது.

நல்ல மனுசன்;
நல்ல சாவு
என உரக்கப்பேசினார்கள்..
மனசுக்குள்
என்ன ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் அப்போது கூட
கணிக்க முடியவில்லை.

பலர் பரபரப்பாக
நடமாடிக்கொண்டிருந்தனர்.
சிலர் மணி
பார்க்கத்துவங்கியிருந்தனர்..

என் கால் மாட்டில்
மனைவி மயங்கிக்கிடக்கிறாள்.
மகள் செய்வதறியாது கண்ணீர் மல்க..


சேதிக் கேட்ட என் மகன்
விமானம், ரயில் என மாறி மாறி
பயணித்து
வந்துக் கொண்டிருக்கிறான்.

“எப்ப எடுப்பாங்க?”
யாரோ வினவ, வேறு யாரோ
விடையறுத்தார்கள்…

“கொஞ்சம் சீக்கீரம் எடுத்த
பரவாயில்லை…….”

இப்படியாய்….
இன்னுமாய்….
எந்த வித
நிகழ்வுகளையும்
உருவாக்காமல்…
யாருக்கும்
சிரமமின்றி….


எங்கோ அடையாளமின்றி
இறந்து போக வேண்டும்
என்பது என் ஆசை…
 

மீள்பதிவாக இந்த கவிதை...

பிளஸ் டூ மாணவியுடன் ஒரு சந்திப்பு..


பெயர் & வகுப்பு:  என்.சுகன்யா 12-அ.

பட்டப்பெயர்: பிளாக்கி, லிட்டில் ஹார்ட், சுகா, சுகன், சுகுமா,சுக்கு

பிடித்த விஷயம் : நன்றாக சாப்பிடுதல்.

பொழுதுபோக்கு: தடயவியல் துறை சம்பந்தப்பட்ட விஷயங்களை
                                சேகரித்தல்.


பிடித்தபுத்தகம்: அன்பு செய்வதே அழகு, விவேகானந்தர் மற்றும்
                              சிவானந்தர் புத்தகங்கள்.


பிடித்தபாடல்: சின்ன தாயவள் (தளபதி), ஆடாத ஆட்டமெல்லாம்
                            (மௌனம் பேசியதே)


பிடித்த தமிழ்வரிகள்: வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது 
                                             நாமாக  இருப்போம்.


பிடித்த தோழிகள்:  பத்மா, வினோதினி, பினோலா மெர்சி, அனிதா.


 எதிரிகள்:  குறிப்பிட விரும்பவில்லை.


எதிர்கால லட்சியம்:  இன்ஜீனிரிங்.


PlusTwo-ல் லட்சியம்: நல்ல மதிப்பெண்கள் எடுப்பது.


சமீபத்தியசந்தோஷம்:  என் தோழிகளிடம் பேசியது.


சமீபத்திய வருத்தம்: எதுவுமில்லை.

வாழ்க்கை என்பது...  தோல்வியும், வெற்றியும்
                                            நிறைந்த சுவாரஸியமான பயணம்.


வகுப்பறை என்பது... வாழ்க்கைக்கான பாடங்களை கற்றுத்தருவது.


உங்களிடம்  உங்களுக்கு  பிடித்தது:  மற்றவர்களைப் பற்றி புரிந்து
                                                                           கொள்ளுதல்.


உங்களிடம்  உங்களுக்கு  பிடிக்காதது:  யார் மீதும் சீக்கிரம்
                                                                                 அன்புக்கொள்ளாமல் இருப்பது.


உங்களைப்பற்றி ஒரு வரி:  எல்லோரிடமும் சரியாக
                                                            நடந்துக்கொள்ளுவது.

****************************************************************************

எல்லோருக்கும் மனசு இருக்கிறது, அதில் எல்லோருக்கும் கனவுகள் இருக்கிறது. கனவுகளை பட்டியல் இட்டு வைப்போம், சிகரத்தை நோக்கிய பயணத்தில் து முதல் காலடியாக இருக்கட்டும்.


****************************************************************************

நந்தினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளின் பேட்டி இந்த வலைப்பதிவில் உள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்கவும். 

வருங்கால இந்தியா பேசுகிறது...


மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாணவர்களே  சொல்றாங்க,  என்னதான் சொல்றாங்க அப்படினு   படியுங்களேன்..



(கருத்துக்கள் தொகுப்பு : +1  அ1, அ மற்றும் ஆ பிரிவு மாணவிகள்)


(மாணவர்கள் என்பது இருபாலருக்கும் பொதுவான வார்த்தை)


ஆசிரியர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்துக்கொண்டு, அதைவிட இரண்டு மடங்கு செய்ய முயற்சி செய்யவேண்டும்.

பாடத்தை புரிந்து படிக்கவேண்டும். மக்கப் பண்ணக்கூடாது.

ஒரு ஆசிரியர் பற்றி இன்னொரு ஆசிரியரிடமோ அல்லது வேறு ஒருவரிடமோ சொல்லக்கூடாது.(விமர்சிக்கக்
கூடாது)


பாடம் நடத்திவிட்ட பின், சார் சொன்னால் தான் படிக்கணும் என்று நினைக்காமல், அடுத்த நாள் வரும்போது படித்துவிட்டு வரவேண்டும்.

படித்ததை எழுதிப்பார்க்க வேண்டும்.




ஆசிரியருக்கு பிடிச்ச மாதிரி நடக்கமுடியாட்டியும் பரவாயில்லை, ஆசிரியருக்கு பிடிக்காததை செய்யக்கூடாது.


படிக்காத மாணவர்களைப் பற்றி தாழ்வாக எண்ணக்கூடாது, அவர்கள் படிப்பதற்கு உதவி செய்யவேண்டும். பிலுக்கிக்கொள்ளாமல் சொல்லித்தர வேண்டும்.


பாடம் நடத்தும் போது முழுகவனத்தையும் செலுத்தவேண்டும். பராக்கு பார்க்கக்கூடாது.


படிக்கும் மாணவர்களிடத்தில் போட்டி இருக்கவேண்டும், பொறாமை இருக்கக்கூடாது.


தேவையில்லாமல் விடுமுறை எடுக்கக்கூடாது.







படிப்பு மட்டுமில்லாது கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் கலந்துக்கொள்ளவேண்டும்.


எல்லா பாடங்களிலும் சமமாக கவனம் செலுத்த வேண்டும்.


வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கவலைப்பட்டுக்கொண்டு படிப்பில் கோட்டை விட்டுவிடக்கூடாது.


ஆசிரியர்களுக்கு மரியாதையை இயல்பாக தரவேண்டும். போலியாக நடிக்கக்கூடாது.


வாழ்க்கையில் முன்னேறிய ஒருவரை ரோல்மாடலாக ஏற்றுக்கொண்டு, அவர் போல் முன்னேற முயற்சிக்க வேண்டும்.





இது சம காலக்கல்வி தொடர் பதிவின் பாகம் - 6
*********************************************************************************


சம காலக்கல்வி பற்றிய முந்தைய பதிவுகள்:





கொஞ்சம் காரம்... ரசித்த டிவிட்டர்கள்...



@bharathbharathi
இந்தியாவுக்கு மூணு பக்கம் தண்ணீர் # எங்களுக்கு நாலு பக்கமும் கண்ணீர் # தமிழக மீனவன்.

@Ganesukumar 
நல்லா சிரிச்சு பேசிட்டு இருந்த பயபுள்ளைகிட்ட நாளைக்கு திங்ககிழமைன்னு சொன்னேன். மூஞ்சி வெளக்கெண்ணையை குடிச்ச மாதிரி ஆயிடுச்சு.

@minimeens 
கிராமத்திலிருந்து வந்தவனின் பஞ்ச் டயலாக்: அங்கே யூரியாவக் கலக்குனேன். இங்கே ஏரியாவக் கலக்குறேன்.

@navish_senthil 
ஈழத்தமிழனுக்காகப் பேசினால்தான் 'இறையாண்மை' என்கிறீர்கள். மீனவனுக்காக குரல் கொடுக்க ஏன் தயக்கம்? #TNfisherman #indianfishermen #TNfishermen

@araathu 
சிவனுக்கு ஒரு அடியாள்தான்- எமன். பிரம்மாவிற்கு உலகெங்கும் அடியாட்கள் - நாம்.

@Ganesukumar
ரிங்க்டோனில் சிட்டுக்குருவியின் சத்தத்தை பதிந்து நிஜ குருவியை அழித்தாயிற்று #SaveEarth

@TBCD 
  #TNfisherman #indianfishermen #TNfishermen #நடக்கலாம் தமிழ் நடிகர் நடிகைகள் இராசபக்சே முன்னிலையில் இலங்கை ஆக்ரமித்த தமிழகத்தில் நடனம் !

@Ganesukumar 
தமக்கு இலவச உணவு கிடைப்பதற்காக எதோ ஒரு உணவுவிடுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு ஊழலைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் ஓட்டுனரும் நடத்துனரும்

@kolaaru
தன்னுடைய காதல் ஏழாவது காதலாக இருந்தாலும்,முதல் காதல் போலவே உறுகி உறுகி பேட்டி கொடுக்க சினிமாகாரர்களால் மட்டுமே முடியும் # ஃபெர்பாமன்ஸ்


@selvu 
தினம் ஒரு மொக்கை : என்னதான் ஒரு District கோணல் மாணலா இருந்தாலும் , அத தமிழ்ல சொல்லும்போது மா'வட்டம்' அப்படின்னுதான் சொல்லுவாங்க!

@meetmadhan 
எல்லா நிச்சயமின்மைக்கு அப்பால்/ இந்த வானத்தின் நிரந்திரம்/ என்னை திகைப்பூட்டிகொண்டே இருக்கிறது - கருணாகரன்

@BalaramanL 
தமிழர்கள் மீன் வலை வைத்திருக்கிறார்கள். இலங்கைப் படையினர் மீனவர் வலை வைத்திருக்கிறார்களோ?? #tnfisherman #tnfishermen #Indianfishermen


@jill_online 
தமிழக வாக்காளர்களே !! நல்ல ஆளுங்கட்சியை தேர்ந்தெடுப்பது அப்புறம் , ஒரு சிறந்த எதிர்கட்சியையாவது இந்த தேர்தலில் தேர்ந்தெடுங்கள்..

@minimeens 
இப்பல்லாம் குழம்புக் கரண்டியில் சோறு போட்டு, நெய் கரண்டியில் குழம்பூற்றி விட்டு நிறைய பணம் கேட்கிறார்கள்.#காக்கைக்கு இதைவிட அதிகம் வைப்பம்

@settaikaaran 
ஆட்கள் தேவை : சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 40 பேர் தேவை சாப்பாடு தங்குமிடம் இலவசம் அனுக வேண்டிய முகவரி விஜய டி ராஜேந்தர் M.A தலைவர்

@TBCD 
#நடக்கலாம் #TNfisherman #indianfishermen #TNfishermen இந்திய எல்லை கடற்கரையுடன் முடிகின்றது. அலைகளும் இலங்கைக்கே சொந்தம் !

***********************************************************************************

நவைச்சுவையை எதிர்பார்த்து வந்தவர்கள் இந்த பதிவில்
 பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களின் பின்னூட்டங்களை படிக்கவும்.
கோக்கு மாக்கு பதில்கள் தேவை. 


இன்னுமொரு ஞானக்குளியல்..



முன்னம் ஒரு காலத்துல

இன்னும் பிறந்திராத
எனக்கும் சேர்த்து
அடிமை விலங்கொடிக்க
போராடிய,
உயிர் துறந்த,

சுயமான குடியரசுக்காக
வீரம் சிந்திய
அத்துணை
தியாக உள்ளங்களுக்காகவது

சாவு வீட்டிலும்
வாக்கு பொறுக்கும்
நிகழ்கால சாக்கடைத்தலைவர்களை
மறந்துவிட்டு;

என் சமர்ப்பணத்தை
உறுதிப்படுத்த,
உணர்விலிருந்து,
உயிரிலிருந்து,
நரம்புகள் புடைக்க
கத்திச் சொல்வேன்

"தாய் மண்ணே வணக்கம்..".

- பாரதி.

இன்றைய வாக்குப்பொறுக்கிகளுக்காக நான் ஏன் என் இந்தியத்திருநாட்டை, கேவலப்படுத்த வேண்டும், அப்படி செய்வது,  நான் பிறக்கும் முன்னம் எனக்கும் சேர்த்து போராடிய தியாக உள்ளங்களை சிறுமைப்படுத்துவதாக ஆகிவிடுமே?

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்