காற்றும் கறுப்பும்... ஒபாமா பற்றி கவிஞர் வாலி.

விகடனில் ரசித்தவை

பரம்பரை கவிதை...

அப்பாவோட தாத்தா பேரு
தாத்தா கூட
பொறந்தவங்க பேருன்னு
மொத்தப் பரம்பரையும்

அத்துப்படியாச்சு
அப்பா மேல

சித்தப்பா போட்ட
சொத்து வழக்கை
படிச்சு படிச்சு

-க.ஆனந்த்
---------------------------------------------------------------------------------

வாழ்க்கையை  , கிராமங்களை,மனிதர்களைப் படிக்காம படைப்பாளி ஆகமுடியாது. ஒரு சினிமா கோடிப் பேர் அண்ணாந்து பார்க்கும் விஷயம். நீங்க எல்லோரையும் பாதிக்கணும். அப்போ எவ்வளவு அனுபவம் வேணும். அதற்குப் புத்தகம் படிக்கணும். தன்னைப் புதுப்பிக்காத, கற்றுக்கொள்ளாத எந்தத் துறையும் விளங்காது.

-இயக்குநர் மிஷ்கின்.
---------------------------------------------------------------------------------
ஒபாமா25

ஒபாமா அதிபராக பதவியேற்றபோது, வாஷிங்டனின் 2.4 டிகிரி செல்சியஸ் குளிரையும் மீறி, 20 லட்சம் பேர் திரண்டனர். கிளிண்டன் இரண்டாவது முறை பதவியேற்றபோது, 50 ஆயிரம் பேர் நேரில் கூடியதே அதுவரையிலான சாதனை.


---------------------------------------------------------------------------------
அழகிய
அனுமார் சிலை
பாரக் ஒபாமாவின்
பாக்கெட்டில்! ஆம்;


கறுப்புக்குப் பிறந்தவன் பையில்
காற்றுக்குப் பிறந்தவன்.

வெள்ளை இருட்டு
வீற்றிருந்த இடத்தில்
கறுப்பு வெயிலைக்
காற்றுதான் உட்கார்த்தியது

என்று ஒருவேளை
ஒபாமா எண்ணியிருக்கலாம்.

நம்பிக்கைதான் மனிதனை
நகர்த்துகிறது
முடமாக இருந்தாலும்
.
 அது மூடமாக இருந்தாலும்.

 -கவிஞர் வாலி நினைவு நாடாக்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
"எந்திரன்"

------------------------------------------------------------------------------------------------------------
மோர் உடலுக்கு நல்லது, ஆனாலும் அதை ஓடி ஓடி விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. கள் தீங்கு தரக் கூடியது. அதுவோ இருந்த இடத்தில் விற்றுப் போகிறது.
-கபீர்.
-------------------------------------------------------------------------------------------------------------
யாருக்குத் தான் துன்பம் இல்லை இந்தஉலகத்தில்? துன்பத்தைச் சந்திக்காத எவரும் இன்பத்தைச் சந்திக்கப் போவது இல்லை.
-கலீல் ஜிப்ரான்.

5 கருத்துரைகள்:

அன்பரசன் said...

பரம்பரை கவி அருமையோ அருமை.

மதுரை சரவணன் said...

அனைத்தும் ரசிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்

எஸ்.கே said...

எல்லாமே சூப்பர்! ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

ம.தி.சுதா said...

நல்ல தேடல் ரசிக்கவும் ருசிக்கவும் வைத்து விட்டீர்கள். என் தள வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..
எம் உறவு தொடரட்டும்.

cheena (சீனா) said...

அன்பின் பாரத் பாரதி - படிததவைகளில் மனதில் தைத்தவைகளைப் பகிர்ந்தமை நன்று - முதல் கவிதை ஆனந்த் எழுதிய கவிதையின் கருத்து - அட்டா - என்ன சிந்தனை - வலி தெரிகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்