எது மதிப்பு, எது மதிப்பில்லை

அழகுக்கு இல்லை மதிப்பு;  
அறிவுக்கு தான்  மதிப்பு.

சிரிப்பதற்கு இல்லை  மதிப்பு; 

சிந்திப்பதற்கு தான் மதிப்பு.

தூங்குவதற்கு இல்லை மதிப்பு; 

துன்பத்தை துடைப்பதற்கு தான் மதிப்பு.

சண்டை போடுவதற்கு இல்லை மதிப்பு; 

சாதிப்பதற்கு தான் மதிப்பு.

நிலவை பார்ப்பதற்கு இல்லை மதிப்பு; 

நிலவில் கால் வைப்பதற்கு தான் மதிப்பு.

முயன்றால் முடியவில்லை
என்பதற்கு இல்லை மதிப்பு; 

முயற்சிக்கு முடிவில்லை
என்பதுதான் மதிப்பு.


- வித்யா..  

    பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு.


9 கருத்துரைகள்:

Unknown said...

மதிப்பிடுதலும், மதிப்பிடும் முறைகளும் காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கையில் எது மதிப்பு, எது மதிப்பில்லை என கணக்கிடுகிறது ஒரு மாணவியின் கவிதை.
கவிதைக்கு மதிப்பிட வரவேற்கிறோம் வலையுலகை.

Arun Prasath said...

கவிதை படிப்பதற்கு இல்லை மதிப்பு ( என்ன மாறி)
கவிதை எழுதவே மதிப்பு ( உங்கள மாறி)

செல்வா said...

//நிலவை பார்ப்பதற்கு இல்லை மதிப்பு;
நிலவில் கால் வைப்பதற்கு தான் மதிப்பு.//

இந்த வரிகள் ரொம்ப அருமையா இருக்குங்க .,
வாழ்த்துக்கள் தங்கச்சி ..!!

Unknown said...

நல்ல தன்னம்பிக்கை கவிதை .. பாராட்டுக்கள் வித்யா ...

நிலாமதி said...

உங்கள் பதிவு மிகவும் மதிக்க் படவேண்டியதாய் ( அருமையாய்) இருக்கிறது.

தினேஷ்குமார் said...

மதிப்பில் கவிதை துவக்கி தடம் பதிக்கும் மாணவி வித்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நண்பரே

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃநிலவை பார்ப்பதற்கு இல்லை மதிப்பு;
நிலவில் கால் வைப்பதற்கு தான் மதிப்பு.ஃஃஃஃ உணர்வூட்டும் வரிகள் வாழ்த்துக்கள்..

எஸ்.கே said...

அற்புதமான கவிதை!
மாணவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

vista consultants said...

Nice

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்