திண்ணையுடைய வீடு...

நான் நேற்றைய மனிதன், 
அவர்களோ "இன்றைய வாழ்க்கை" வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். 
"நாளை" என்பது எல்லோருக்கும் பொது.
வெறும் சுவாசம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் யாரையும் குற்றம் சொல்ல போவதில்லை நான்....

மென்மை... மென்மை... மென்மை...

இன்றைய கவிதைகள்:
By  சௌமினா தஸ்ரின்   எட்டாம் வகுப்பு இ பிரிவு.


சூரியனைக் கண்டேன்;
என்னுள் வெளிச்சம் தோன்றியது.
சந்திரனைக் கண்டேன்;
என்னுள் குளிர்ச்சி தோன்றியது.
நட்சத்திரங்களைக் கண்டேன்;
என்னுள் மகிழ்ச்சி தோன்றியது.
பூக்களை கண்டேன்;
என்னுள் புத்துணர்வு தோன்றியது.
தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.
 

உங்க பக்கத்துல தான் நிக்குறாரு எமதர்மராசா...


மழைத்தண்ணியில 
வீடெல்லாம் மிதக்குதுன்னு
டீ.வி செய்தியில புலம்புறீங்க..
ஏரில வீடு கட்டுனா
எங்கதான் போயி நிக்கும் 
மழைத்தண்ணி?


ஊருக்குள்ள யானை வருதுன்னு
பட்டாசு வைக்குறீங்க;
ஏனுங்கனு கேட்டா
வாய் உங்களுக்கு நீளுதுங்க..
அதோட இடத்துல புகுந்துகிட்ட
உங்கள தொரத்த
ஆணைகுண்டு இல்ல இல்ல
அணுகுண்டு வெக்கலாங்களா?


கிராமத்து அரசமரத்தடி
மோசமின்னு சொன்ன நீங்க
நகரத்து ஆஸ்பத்திரியில
பஞ்சு மெத்தையில
படுத்துதான் கெடக்குறீங்க...
அத சொகமுன்னு சொக்கிப்போயி
கிடக்குறீங்க...


விவசாயம் நடந்த இடத்துல
கான்கிரீட் பூக்கள நட்டீங்க..

மரத்தை எல்லாம்
மதக்கலவரத்தில வெட்டுனீங்க..


இப்ப மொத்தமா மாட்டிகிட்டு
முழிக்குறீங்க...


வெதைச்சது வினைய தானே
அப்புறம் என்ன வெட்கம் அறுக்கறதுக்கு...


என்னவெனா செய்யுங்கப்பு..
ஆனா உங்க நகரத்து
புது வீட்ட
எதுக்காவது தோண்டிராதீங்க...
ஒரு வேள அது
பொண பொதைச்ச இடமாக இருக்கலாங்க...

                                                          - பாரதீ... 
இந்த கவிதை பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்..

யாரை நானும் குற்றம் சொல்ல...

எங்கெங்கு
சென்றாலும்
"வேலை காலியில்லை"
வாசகம்
முகத்தில்
அறைகிறது.


பணம்
சேர்க்க வேண்டிய
கட்டாயமும்,
விரக்தி கலந்த
வெறுமையும்
கழுத்தை பிடிக்காமலே
நெறிக்கின்றன.


மெத்தப்படித்தவர்கள்
கூட
ஒரு சில ஆயிரங்களுக்காக
வளைந்து
  நெ
        ளி
    ந்
        து
கூழைக்கும்பிடுகளுடன்...

அதை விட
பரிதாபமாய்த்
தெரிகிறது;
இப்போது
படித்துக்கொண்டு
இருக்கும்
நாளைய பட்டதாரிகளை
நினைத்தால்...

எஸ்.பாரத்.
(விருந்தினர் பக்கம்)
இந்த கவிதை பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்..

பேர் சொல்லி புராணம்....

 "எம் பேரு எனக்கு பிடிக்கவே இல்லீங்க மிஸ்"
"உம் பேரு நந்தினி தானே, நல்ல பேரு தானே, ஏன் பிடிக்கல?"
 ஒரு நாள் எங்கள் வகுப்பறையில் பேர்கள் பற்றிய பேச்சு ஓடிக்கொண்டிருந்த போது வந்து விழுந்த விஷயம் இது.

பேர் பிடிக்காதததுக்கு அவள் சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது.

"எல்லா சீரியலையும் வில்லியோட பேரு நந்தினினுதாங்க இருக்குது. நீங்க நல்லாயிருக்குனு சொன்ன பொன்னியின் செல்வன் கதையிலியும் வில்லி பேரு நந்தினிதாங்க".

"ஆனா அந்த கதையோட கடைசில, ஏன் அவங்க வில்லியா மாறுனாங்க அப்படிங்கிறது புரிஞ்சதால கொஞ்சம் ஆறுதலா இருந்தது"

மிஸ் ஆரம்பித்த பேர் சொல்லி புராணம் சுவாரஸியமான கட்டத்தை எட்டியிருந்ததை உணர முடிந்தது.
 "மிஸ், எனக்கு எம் பேர் ரொம்ப பிடிக்கும். 
ராஜா மணி-ங்கிற பேருக்கு பின்னால ஒரு கதை இருக்குங்க. சோழ ராஜாவின் அரண்மனை முன்பிருந்த அரசவை ஆராய்ச்சி மணியை நீதி கேட்டு அடித்த தாய் பசுவின் கதைதாங்க"

சுவாரசியமற்ற சாதாரண பதில்களின் இடைஇடையே பளீச் பதில்களும் வந்து விழுந்துக்கொண்டிருந்தன.

"எம் பேரு சண்முகப்பிரியா,
எனக்கு எம் பேரு ரொம்ப பிடிக்கும், சாமியோட பேரு. ஆனா சில புள்ளங்க சண்முகா-னு சுருக்கி கூப்பிட்டா கோவம் வரும்"

 "எம் பேரு சஃதானா பேகம். எம் பேர யாருமே சரியா சொல்ல மாட்டங்க, அப்பெல்லாம் கோவம் வரும்." (எங்கே நீஙக சொல்லுங்க சஃதானா பேகம்

"எம் பேரு எனக்கு புடிக்காது"
"காளியம்மாள்?"
"ஆமாங்க, மொதல எனக்கு ரம்யா-னு தான் பேரு வெச்சாங்க, ஆனா பாட்டி ஸ்கூல சேத்தும் போது, காளியம்மானு சொல்லிட்டாங்க, எனக்கு ரம்யாஸ்ரீ-ங்கிற பேரு ரொம்பபிடிக்கும்".
(இப்படித்தான் மக்களே, பாட்டிகள் பலபேர் வாழ்க்கையில விளையாடி இருக்காங்க )

நல்லது நண்பர்களே, எங்கள் வகுப்பறை கதை பேச ஆரம்பித்தால், ஆயுசு பத்தாது.

"உங்களுக்கு உங்கள் பேரு பிடிக்குமா?
"வேறு பேரு வைச்சுக்கிடறதுனா என்ன வெச்சுகுவீங்க"
"வலை உலகில் புனைப்பெயர வைத்துக்கொள்ள எப்படியெல்லாம் யோசித்தீர்கள்"
 

"கும்புடறேன் சாமி" இது ஒருவரின் பெயர்.
இதற்கு என்ன பின் புலம் இருக்கும் என யூகிக்க முடியுமா உங்களால்?

"கும்புடறேன் சாமி" என்ற பெயரில் இந்த சமூகத்தால் அவமானப்பட்ட ஒரு தகப்பனின் வெறி மிக்க கோபம் இருப்பதை உங்களால் உணர முடிகிறதா?

காலம் முழுவதும் கும்பிட்டு,கும்பிட்டு முதுகெலும்பு வளைந்து போனவன் தன் மகனுக்கு இந்த பேர் வைத்ததற்கு பின், முதலமைச்சர் என்ன, ஜனாதிபதி என்ன, எந்த சாதியைச் சேர்ந்த கொம்பனாக இருந்தாலும், கும்புடறேன் சாமி-னு தானே கூப்பிடனும்..


டிஸ்கி:1
பெரியார், இது போல "சாமி" என முடியும் பெயர்களை வைத்துக்கொள்ள அறிவுறுத்தியதாக எங்கோ படித்ததாக ஞாபகம்.
இது பற்றி முழுமையாக யாரேனும் பின்னூட்டம் இட்டால் மிக மகிழ்வோம்.
டிஸ்கி:2
இன்றைய தினத்தில் சட்டமேதை அம்பேத்கார் அவர்களை நினைவு கூறுவதில் ரோஜாப்பூந்தோட்டம் பெருமிதம் கொள்கிறது.
டிஸ்கி:3
நந்தினி, சண்முகப்பிரியா ஆகிய மாணவிகளின் பேட்டி இந்த வலைப்பதிவில் உள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்கவும். 
(யெச் சூஸ் மீ, இந்த பதிவுக்கு ஒட்டு, பின்னூட்டம் போட்டுட்டு அப்பறம் படிங்க).

டிஸ்கி :4
வகுப்பறையில இந்த நாயம் எல்லாம் பேசுறாங்க-னு தலைமை ஆசிரியரிடம் போட்டுக் குடுத்துறாதீங்க. 

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்