மழைத்தண்ணியில
வீடெல்லாம் மிதக்குதுன்னு
டீ.வி செய்தியில புலம்புறீங்க..
ஏரில வீடு கட்டுனா
எங்கதான் போயி நிக்கும்
மழைத்தண்ணி?
ஊருக்குள்ள யானை வருதுன்னு
பட்டாசு வைக்குறீங்க;
ஏனுங்கனு கேட்டா
வாய் உங்களுக்கு நீளுதுங்க..
அதோட இடத்துல புகுந்துகிட்ட
உங்கள தொரத்த
ஆணைகுண்டு இல்ல இல்ல
அணுகுண்டு வெக்கலாங்களா?
கிராமத்து அரசமரத்தடி
மோசமின்னு சொன்ன நீங்க
நகரத்து ஆஸ்பத்திரியில
பஞ்சு மெத்தையில
படுத்துதான் கெடக்குறீங்க...
அத சொகமுன்னு சொக்கிப்போயி
கிடக்குறீங்க...
விவசாயம் நடந்த இடத்துல
கான்கிரீட் பூக்கள நட்டீங்க..
மரத்தை எல்லாம்
மதக்கலவரத்தில வெட்டுனீங்க..
இப்ப மொத்தமா மாட்டிகிட்டு
முழிக்குறீங்க...
வெதைச்சது வினைய தானே
அப்புறம் என்ன வெட்கம் அறுக்கறதுக்கு...
என்னவெனா செய்யுங்கப்பு..
ஆனா உங்க நகரத்து
புது வீட்ட
எதுக்காவது தோண்டிராதீங்க...
ஒரு வேள அது
பொண பொதைச்ச இடமாக இருக்கலாங்க...
- பாரதீ...
இந்த கவிதை பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்..