கலாய்ப்பு சிறப்பிதழ் 2 - SMS-ல் கடுப்பேத்தறாங்க எசமான்..


நாட்டாமை: என்னம்மா பிராது?
பெண்: அய்யா, எம் புருஷன் என்ன கொடும பண்றாரு, நீங்க தான் எங்கள பிரிச்சு வைக்கணும்.
நாட்டாமை: பிரிஞ்சு போற அளவு என்ன கொடும பண்ணுனா ?
பெண்: அய்யா, டெய்லியும் குடிச்சுட்டு வந்து அடிக்கிறாருங்க...
நாட்ஸ்: ஆ... செல்லாது,செல்லாது, வேற சொல்லு...
பெண்: கீவலன் படத்துக்கும், வருத்தகிரி படத்துக்கும் மொத காட்சிக்கு கூட்டிட்டு போறேனு  சொல்லாருங்க....
நாட்ஸ்: ஆ.. அவ்வளவு கொடுமக்காரனா..,
அப்படினா சரி.. உங்களுக்கு விவாகரத்து கொடுத்துரேன்...
***************************************************************************************
என்னதான் எம்.பி.பி.எஸ். படிச்ச டாக்டரா இருந்தாலும்,
கம்பியூட்டர் வைரஸ் -க்கு மாத்திர குடுக்க முடியாது.
இப்படிக்கு, கம்பியூட்டர் மவுஸ் -க்கு எலி மருந்து வைப்போர் சங்கம்.
*******************************************************************************************
அப்பா : டேய்...உன் வயசுல ஐன்ஸ்டின் பஸ்ட் ரேங்க் வாங்குனாரு. உன்னயும் பாரு...


மகன்: உன் வயசுல ஹிட்லர் தற்கொல பண்ணிகிட்டாரு.நான் அதெல்லாம் சொல்லறனா?
*******************************************************************************************
தவறுகள் என்பது வெற்றியின் முதல் படி என்றுச் சொல்கிறார்கள். உண்மையில் தவறுகளைத் திருத்திக்கொள்வதே வெற்றியின் முதல் படி .
*******************************************************************************************

பரீட்ச்சையில் பெயில் ஆனா திரும்பவும் படிச்சு பாஸ் ஆகலாம், ஆனால் பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு, பெயில் ஆக முடியுமா?

*************************************************************************************,  சச்சின் கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். காரணம் சச்சின் விளையாடும் போது, எங்கள் நாட்டின் உற்பத்தி 50% குறைவது ஏன் எனத் தெரிந்துகொள்ள...
-பராக் ஒபாமா.
****************************************************************************************
வடிவேலு: இங்க ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்...

பார்த்திபன்: அப்ப ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை குடுங்க.
*********************************************************************************

படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?

படிப்பு தான் வரலியே, தூக்கமாச்சு வருதேனு சந்தோஷமா தூங்கிறனும்.
***************************************************************************

அழகான ஓவியம் என்று ரசிக்கும் உலகத்தார்க்கு எப்படி புரிய வைப்பேன், அது என் புகைப்படம் என்று...
**********************************************************************
வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் , நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டுத்தான் வந்திருப்பார்கள்..
********************************************************************************

இன்றைய பழமொழிகள்:

1. ஒரு பானை சோற்றுக்கு, ஒரு குண்டா குழம்பு.

2.தம்பி உடையார்;
அண்ணன் செட்டியார்..


3. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ...
உங்க மனைவி சந்தேக படுவாங்க...


4.சுத்தம் சோறுப்போடும், சுகாதாரம் குழம்பு ஊற்றும்.

************************************************************
எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகிறது,
எல்லாம் புரியும்போது வாழ்க்கை முடிந்து விடுகிறது.
****************************************************************************
டேய், ஏன் சட்டையில நூறு ரூபா வச்சிருந்தேன், இப்ப பத்து ரூபா தான் இருக்கு, ஏன்டா பணத்த எடுத்த?
நீ தான நூத்துக்கு, தொன்னூறு எடுக்கணும்னு சொன்ன!
******************************************************************************************

யாருடைய இதயத்தையும் காயப்படுத்தாதீர்கள், ஏனெனில் அவர்களுக்கு இருப்பது ஒரே ஒரு இதயம் தான். (எலும்பு 206 இருக்கு எசமான்)

*********************************************************************************************

உன் அருமை தெரியாத இடத்தில் நீ இருந்தால் உன் பெருமை யாருக்கும் தெரியாமல் போய்விடும்...
****************************************************************************************
சிரிப்பு வந்தால் சிரிக்க முடியும், அழுகை வந்தால் அழுக முடியும்; ஆனால் காய்ச்சல் வந்தால் காய்ச்ச முடியுமா?

***********************************************************************************
முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், ஆனால் முயலாமை என்றும் வெற்றி பெறாது.
******************************************************************************

இந்த பதிவுக்கு இன்ட்லியில்
ஓட்டுப்போடாதவர்களுக்கு நடுமண்டையில்  நூறு கொட்டு வைக்கப்படும்..
(எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)

45 கருத்துரைகள்:

சாந்தி மாரியப்பன் said...

அப்ப தமிழ்மணத்துல ஓட்டு வேணாமா!!

ஜோக்ஸ் நல்லாருக்கு :-))

செல்வா said...

அடடா நாட்டாமைக்கு இப்படி ஒரு சுருக்கமா ..?
(நாட்ஸ் ) ..

செல்வா said...

//இப்படிக்கு, கம்பியூட்டர் மவுஸ் -க்கு எலி மருந்து வைப்போர் சங்கம்//

உங்க சங்கத்துல சேரணும்னா எதாவது கட்டணம் கொடுக்கனும்களா ..?

தினேஷ்குமார் said...

எச் சூச் மி ஒட்டு போட்டுட்டுதான் உள்ளவரேன் நம்ப மண்ட தாங்காது

ஆனந்தி.. said...

வோட்டு போட்டோம்ல..:)) இப்ப உங்களை கொட்டலாமா நச்சுனு...ஹ ஹ...:))))

தினேஷ்குமார் said...

தவறுகள் என்பது வெற்றியின் முதல் படி என்றுச் சொல்கிறார்கள். உண்மையில் தவறுகளைத் திருத்திக்கொள்வதே வெற்றியின் முதல் படி

தினேஷ்குமார் said...

வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் , நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டுத்தான் வந்திருப்பார்கள்..

தினேஷ்குமார் said...

1. ஒரு பானை சோற்றுக்கு, ஒரு குண்டா குழம்பு.

2.தம்பி உடையார்;
அண்ணன் செட்டியார்..


3. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ...
உங்க மனைவி சந்தேக படுவாங்க...


4.சுத்தம் சோறுப்போடும், சுகாதாரம் குழம்பு ஊற்றும்

தினேஷ்குமார் said...

முடியல விட்டிடுனா விட்டுடனும்
எச் சூச் மி பிளீஸ் கால் தா ஆம்புலன்ஸ்

எஸ்.கே said...

ஹா ஹா ஹா ஹா!

http://3.bp.blogspot.com/_Q-82q7FaIpU/R1grDrEy1nI/AAAAAAAABCE/5x1DjFe6-xc/s400/ATT22.jpg

வினோ said...

/அழகான ஓவியம் என்று ரசிக்கும் உலகத்தார்க்கு எப்படி புரிய வைப்பேன், அது என் புகைப்படம் என்று... /

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

நன்றிங்க...

அருமையான பதிவு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vanthen
siriththen
ottu potten
athanaal kutta vendaam please

NaSo said...

நான் ஓட்டு போட்டுட்டேன். என்னை விட்ருங்க.

ஆமினா said...

//மகன்: உன் வயசுல ஹிட்லர் தற்கொல பண்ணிகிட்டாரு.நான் அதெல்லாம் சொல்லறனா?//
அதானே.....!!!

ஏன் 50 சதவீதம் உற்பத்தி குறையுதாம்? :) கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

ஹரிஸ் Harish said...

கடுப்பேத்துறாங்க மை லார்ட்...

நான் ஓட்டு போட்டுடேன்..

RAJATHI RAJA said...

1994 பிரபு தேவாவுக்கும், 2010 பிரபு தேவாவுக்கும், என்ன வித்தியாசம்?

1994 ல் பிரபு தேவா "காதலன்"
2010 ல் பிரபு தேவா "கள்ள காதலன்"

ஹா...ஹா...ஹா...

குறையொன்றுமில்லை. said...

அவசரம், வயித்துவலி மருந்தும் கூடவே அனுப்பரதுதானே. தாங்கலிபா.

Chitra said...

முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், ஆனால் முயலாமை என்றும் வெற்றி பெறாது.

...Super!!!

Unknown said...

கலக்குறீங்க ...

மாணவன் said...

அய்யயோ ரொம்ப லேட்டாயிடுச்சே,

//"கலாய்ப்பு சிறப்பிதழ் 2//

நடத்துங்க நடத்துங்க...

மாணவன் said...

//படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?
படிப்பு தான் வரலியே, தூக்கமாச்சு வருதேனு சந்தோஷமா தூங்கிறனும்.//

சூப்பர் ஐ லைக் இட்....

மாணவன் said...

//முயலும் வெற்றி பெறும், ஆமையும் வெற்றி பெறும், ஆனால் முயலாமை என்றும் வெற்றி பெறாது.//

செம்ம டச்சிங்.....

மாணவன் said...

//இந்த பதிவுக்கு இன்ட்லியில்ஓட்டுப்போடாதவர்களுக்கு நடுமண்டையில் நூறு கொட்டு வைக்கப்படும்.. (எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)//

இது வேறயா...

இங்கயுமா கொட்டு தாங்காது சாமீ..

மாணவன் said...

இண்ட்லியில் 21ஆவது தமிழ்மணத்தில் ஒன்பதாவது ஓட்டு நம்மளதுதான்

எப்படி நம்ம கணக்கு....

நாளைக்கு வரலாறு பேசும் பாருங்க>>>

மாணவன் said...

அப்பாடி எப்படியோ ஒரு கணக்கா 25ல முடிச்சுடுவோம்..

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

அன்பரசன் said...

கலக்கல்.

ஜெய்லானி said...

உண்மையிலேயெ நல்ல ஜோக் .!! சிலது சிந்திக்கவும் வைக்குது..:-))

Ramesh said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்... நடுவுல நடுவுல தன்னம்பிக்கை மேட்டர்ஸும் சூப்பர்...

தினேஷ்குமார் said...

அழகா சமச்சு வச்சு ஆசையோடு காத்திருந்தா என்ன கொடுமை சரவணன் இது சரி பிரீஸர்ல எடுத்து வைக்கிறேன் நாளைக்கு வந்து சாப்பிடுங்க நல்லாத்தான் இருக்கும்

ஹேமா said...

கொஞ்சம் குழப்பமாத்தான் வந்தேன்.நிறையச் சிரிச்சேன்.
நன்றி.ஓட்டும் போட்டேன் !

சங்கரியின் செய்திகள்.. said...

சூப்பர் கலக்கல்ஸ்...

Unknown said...

செம காமெடி .கலக்கல்ங்க

வைகை said...

கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்!! ஆனாலும் ஓட்டு போட்டாச்சு!( அப்பாடி!! குட்டுல இருந்து தப்பிச்சாச்சு!!)

சுந்தரா said...

//அப்பா : டேய்...உன் வயசுல ஐன்ஸ்டின் பஸ்ட் ரேங்க் வாங்குனாரு. உன்னயும் பாரு...


மகன்: உன் வயசுல ஹிட்லர் தற்கொல பண்ணிகிட்டாரு.நான் அதெல்லாம் சொல்லறனா?//

//ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் ...
உங்க மனைவி சந்தேக படுவாங்க...//

மக்களே, சிரிச்சு முடியல :)

அசத்துங்க.

Aathira mullai said...

நாங்களும் ஓட்டுப்போட்டுத்தான் உள்ளே வந்திருக்கோம்...

கைவிரல்ல இங்க் இருக்குது பார்த்துக்கோங்க.. கொட்டினீங்க தெரியுமாக்கும்...

உங்களுக்காக கள்ள ஓட்டு வேற ஒன்னு போடப் பாத்தேன்.. ஓட்டுப்பெட்டி ஒத்துக்கல்ல...

நல்லா சிரிக்க வைத்த பதிவுக்கு நன்றி.. இவ்வளவு நாள் எப்படி அறிமுகம் ஆகாமல் இருந்தோம்!!?

என் வலைத்தளத்தில் தங்கள் பாதம் பதிந்தமைக்கும், கருத்துப் பகர்ந்தமைக்கும், தொடர்ந்து வர இருப்பதற்கும் என் மனமார்ந்த நன்றி..

சி.பி.செந்தில்குமார் said...

செம காமெடி.

>>>>இந்த பதிவுக்கு இன்ட்லியில்
ஓட்டுப்போடாதவர்களுக்கு நடுமண்டையில் நூறு கொட்டு வைக்கப்படும்..
(எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)>>>

இது தூள்

MANO நாஞ்சில் மனோ said...

//இந்த பதிவுக்கு இன்ட்லியில்
ஓட்டுப்போடாதவர்களுக்கு நடுமண்டையில் நூறு கொட்டு வைக்கப்படும்..
(எங்களுக்கு லட்சியம் தாங்க முக்கியம்.)//
இதை படிக்க வச்சி காய்ச்சி எடுத்தது'மில்லாம நடுமண்டையில கொட்டு வேறயா?

தெரியாம உள்ளே வந்துட்டேனோ....:]]

MANO நாஞ்சில் மனோ said...

//வோட்டு போட்டோம்ல..:)) இப்ப உங்களை கொட்டலாமா நச்சுனு...ஹ ஹ...:))))//
அட, இது நல்லாயிருக்கே...:]]

MANO நாஞ்சில் மனோ said...

//உண்மையிலேயெ நல்ல ஜோக் .!! சிலது சிந்திக்கவும் வைக்குது..:-))//



சிந்தனை, உமக்கு?

நீரு மங்க்குனின்னு எனக்குதானே தெரியும்.....:]]

MANO நாஞ்சில் மனோ said...

//எச் சூச் மி ஒட்டு போட்டுட்டுதான் உள்ளவரேன் நம்ப மண்ட தாங்காது//
ஏன் ஹெல்மெட் போட்டுட்டு வர வேண்டியதுதானே.....:]]

MANO நாஞ்சில் மனோ said...

//உங்க சங்கத்துல சேரணும்னா எதாவது கட்டணம் கொடுக்கனும்களா//
ஆமா,

பத்து எலி புளுக்கைய தண்ணி இல்லாம திங்கணும்......:]]

MANO நாஞ்சில் மனோ said...

//நான் ஓட்டு போட்டுட்டேன். என்னை விட்ருங்க//
எவனை விட்டாலும் இந்த அரசியல் வியாதி பயலுவல விடவேபூடாது,

நல்லா கொட்டுங்க.....:]]

R. Gopi said...

pala (puthu?) mozhigal super (Tamil font not working)

Unknown said...

//படிக்கும்போது தூக்கம் வந்தா என்ன பண்ணனும்?
படிப்பு தான் வரலியே, தூக்கமாச்சு வருதேனு சந்தோஷமா தூங்கிறனும்.//

இத படிக்கும் போதே பாதில நான் தூங்கிட்டேன் :D

நிலாமதி said...

வோட்டு போட்டோம்ல..:)) இப்ப உங்களை கொட்டலாம்களா?

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்