வினாக்களின் நீட்சி..

அங்கே இல்லாதவனுக்கு
வறுமையால் பட்டினிச்சாவு;

இங்கே இருப்பவனுக்கோ
முறையற்ற உணவால் மாரடைப்புச்சாவு;

அங்கே இல்லாதவனுக்கு
மழலையை பெற புதிய மருத்துவயுக்தி

இங்கே அதிகம் இருப்பவனுக்கோ
கள்ளிப்பால் யுக்தி;

அங்கே இல்லாதவனுக்குப் புகலிடம்
தெருவோர நடைப்பாதை

இங்கோ இருப்பவனுக்கு புகலிடம்
எட்டடுக்கு மாடி, எட்டிப்பிடிக்க வானம்;

ஏனிந்த பேதம்? ஏனிந்த பிரிவினை?
ஏனிந்த பாகுபாடு?

பகுத்துண்ணல் என்பது உணவுக்கு மட்டுமா?
வாழ்க்கை முறையில் இல்லையா?

- உமா மகேஸ்வரி.ம.

3 கருத்துரைகள்:

Joelson said...

மிகவும் சரி...
அருமை கவிதை வரிகளும் தன்

Unknown said...

நன்றி..பிடித்த வரிகளைக் குறிப்பிட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.. இருப்பினும் நன்றி ஜோயல்சன்

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

உமா மகேஸ்வரியின் கட்டுரை அருமை - இருப்பவனிடம் இருந்து இல்லாதவனுக்குப் பகிரலாமே என்ற எண்ணம் நன்று - வினாக்களின் நீட்சி என்னும் தலைப்பு நன்று.

கள்ளிப்பால் பகிர இயலாதெ - பகிரக் கூடாதே - அவ்வரிகள் இவ்வுரைக்குப் பொருந்தாதே

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்