கவிதை BY ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...


அம்மாவின் அரவணைப்பு..,

 வானத்தில் இருப்பது நட்சத்திர கூட்டங்கள்..
கடலில் இருப்பதோ
மீன்களின் கூட்டங்கள்
ஆனால்

என் மனதில் இருப்பதோ
அம்மாவின் அன்பு முத்தங்கள்

-
...ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...

-----------------------------------------------------------------------
கனவு

 லட்சியத்தின் ஒரு வழி பாதை
நிஜங்கள் கூட தோற்றுப் போகும் உத்தமம்
கற்பனைகளின் சங்கமம்
ஏழைகளின் ராஜ சிம்மாசனம்
உறவுகளின் ரகசிய உடன்பாடு
கனவுகள் ஏமாற்றம் அடையும் போது தான்
கண்ணீர் விழிகளில் குடியேற இடம் தேடுகிறது

-ஆர்.நிர்மலா..
-----------------------------------------------------------------------------------------------
மழை...

ஓ..வானமே உன் மகன் குறும்புக்காரன்...

அடிக்கடி ஓடியாடி விளையாடி
ஆடைகளை அழுக்காக்குகிறான்
...

நீயோ சலவையில் கெட்டிக்காரி.
அடித்து துவைக்கும்
சத்தம் இடியாய் கேட்கிறது
.

அலாசுகின்ற நீர் மழையாய் பெய்கிறது.
சிறிது நேரத்தில்
உன்
மகன் பளிச்சென மின்னுகிறான்
...ஜி.ரோசரி. XI-A...



10 கருத்துரைகள்:

க.பாலாசி said...

மூன்று கவிதைகளும் முத்துக்கள்... நல்லாயிருக்கு கண்ணுகளா... தொடர்ந்து எழுதுங்கள்...

Unknown said...

க.பாலாசி அவர்களுக்கு நன்றிகள்..

எஸ்.கே said...

மூன்றும் அருமை. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Unknown said...

நன்றி எஸ்.கே.

naveen (தமிழமிழ்தம்) said...

அறிவாற்றல் புலப்படும் கவிதைகள். அருமை அருமை.

வினோ said...

மூன்றும் அருமையா இருக்குங்க... என் வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

Unknown said...

funmachine-தமிழமிழ்தம் மற்றும் வினோ அவர்களுக்கு நன்றிகள்.

Anonymous said...

very good

ஏழைகளின் ராஜ சிம்மாசனம்
உறவுகளின் ரகசிய உடன்பாடு
கனவுகள்

Unknown said...

ஓ..வானமே உன் மகன் குறும்புக்காரன்...

cheena (சீனா) said...

அன்பின் மாணவியர்க்ளே !

அம்மா, கனவு, மற்றும் மழை என்ற தலைப்புகளில் அருமையாக கவிதை எழுதிய ஆர்.சர்மிளா, ஆர்.நிர்மலா, மற்றும் ஜி.ரோசரி ஆகிய மாணவிகளுக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்